கோவை, மே 27-கோவை சரவணம்பட்டி அருகே மூன்று வயது சிறுமி கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் ரூபினி தம்பதியின் மகள் தேவிஸ்ரீ(3). இந்த சிறுமி திங்களன்று காலை சரவணம்பட்டி கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அப்போது சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்தது. காவல்துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் ரூபிணியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரூபிணியுடன் தொடர்பில் இருந்த தமிழ்ச்செல்வனைப் பிடிக்க மூன்றுதனிப்படை அமைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்று வயது சிறுமியை கொலைசெய்து முட்புதரில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.