உடுமலை, ஆக. 28- உடுமலை பகுதியில் சாலை அக லப்படுத்தும் வேலைக்காக ஓரத்தில் இருந்த மரங்களை முறையாக அப்பு றப்படுத்தாமல் போனதால் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. உடுமலை – மூணார் சாலையில் செங்குளம் பகுதியில் இருந்து பள்ள பாளையம் பெருமாள் கோவில் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு அபாயகர மான வளைவுகள் உள்ளது. அப்பகு தியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், இருக்கும் வளை வுகளை விபத்து ஏற்படாத வகை யில் அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுஞ் சாலைத் துறையின் சார்பில் விபத்து ஏற்படுத்தும் வளைவுகளை அகலப் படுத்தும் வேலைகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது. அக லப்படுத்தும் பணியில் இடையூறாக இருந்த மூன்று மரங்கள் அகற்றப் பட்டது. ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டியவர்கள், மேல் மரத்தை மட்டும் வெட்டி நிலத்தில் இருந்து மூன்று அடி அளவு வேர் பகுதியை வெட்டாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். முழமையாக மரத்தை அகற்றாத நிலையில், மரத்தின் வேர் பகுதி மீது வாகனங்கள் அவ்வழியாகச் செல் லும் வாகனங்கள் மோதி தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இதுபற்றிக் கூறும் போது, மரங்களை முறையாக அகற் றாமல் சாலையை அகலப்படுத்திய அதிகாரிகள் மற்றும் மரத்தை அப்பு றப்படுத்த ஒப்பந்தம் எடுத்த ஒப்பந் ததாரர் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் செங்குளம் முதல் பெருமாள் கோவில் வரை தெரு விளக்குகளை அமைத்து, இரண்டு வளைவுகளி லும் விபத்துகள் ஏற்படாத வகை யில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஐந்து அடி தொலைவில் பிஏபி வாய்க்கால் உள்ளது. எனவே உடனடியாக இரும்பு தடுப்புகள் ஏற்படுத்த வேண் டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து நெடுச்சாலைத் துறை உதவி பொறியாளர் கணேஷ் குமாரிடம் கேட்ட போது, விபத்து ஏற்படும் மரத்தின் மீதி பகுதி உட னடியாக அப்புறப்படுத்த நடவ டிக்கை எடுக்கபடும் என்றார்.