கோவை, பிப். 9- மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் காண் போரை கவர்ந்திழுக்கும் அரிய வகை மலர் கள் பூத்துள்ளது. நீலகிரி மலையடிவாரத்தில் அமைந் துள்ள கல்லார் பகுதியில் கடந்த 1900 ஆண்டு ஆங்கிலேயர்களால் பழப்பண்ணை துவக்கப்பட்டது. நூற்றாண்டை கடந்த இந்த அரசு தோட்டக்கலை பழப்பண்ணை யில் ஒரு சில இடங்களில் மட்டுமே விளை யக்கூடிய வெண்ணைப்பழம், லிட்சி, மலே யன் ஆப்பிள், மங்குஸ்தான், துரியன், ரம்புட் டான், சிங்கப்பூர் பலா போன்ற அரிய வகை பழ வகைகள் மற்றும் மலர்கள் வளர்கின் றன. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் கூறுகையில், பனிக்கா லத்தின் இறுதி கட்டத்தில் பூக்கும் பவுடர் பப் மலர்கள் தற்போது மலர்ந்துள்ளன. கண்ணைக்கவரும் வகையில் செந்நி றத்தில் பப் போன்ற இம்மலர்கள் காணப்ப டுவதால் இதனை “பவுடர் பப்” பூக்கள் என்றே அழைக்கப்படுகிறது. மேலும், இப் பண்னையில் தேன் நிறைந்த பூவைத் தேடி ஏராளமான தேன் சிட்டுக்களும், நூற்றுக்கணக்கான மலர்கள் பூத்துள்ளதால் சிறு சிறு பறவையினங்களும் வருகை தருகின்றன. இதனால் இப்பழப்பண் ணைக்கு வருகை தரும் பார்வையாளர்க ளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள தாக தெரிவித்துள்ளனர்.