tamilnadu

img

அ.செட்டிபாளையம் அரசு பள்ளிக்கு கல்விச் சீர்

 திருப்பூர், ஜூலை 14 – திருப்பூர் அ.செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பெற்றோர் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டது. இதில்  சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட் கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப்பன் தலைமையில் இப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் கே.தரணி வரவேற்றார். காந்திநகர் ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல்கரீம், ஜெயச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவசுப்பிரமணியம், ஏவிபி  பள்ளி மேலாளர் ராமசாமி, சுந்தரமூர்த்தி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் உமாவதி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.