திருப்பூர், ஜூன் 12 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் இச்சிப்பட்டி ஊராட்சி யில் தனிநபர் கழிப்பிடம் கட்டு வதற்கு மானியத்தொகை தர, பய னாளிகளிடம் வட்டார ஒருங்கி ணைப்பாளர் லஞ்சம் பெற்றுள்ளார். ஆனால் அவர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுப்பதற்குப் பதிலாக, லஞ்சமாக பெற்ற பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வ மாக அதிகாரிகள் கடிதம் வாங்கி யுள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு: இச்சிப்பட்டி ஊராட்சியில் கடந்த 2016 – 17 நிதியாண்டில் தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டிய பய னாளிகளுக்கு அரசு மானியத் தொகை ரூ.12 ஆயிரம் கொடுப் பதற்காக, அவர்களிடம் ரூ.1500 முதல் ரூ.2000 வரை லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது. எனினு்ம் அந்த மக்களுக்கு தனி நபர் கழிப்பிடத்திற்கான மானியத் தொகை தரப்படவில்லை. எனவே, தனிநபர் கழிப்பிட பயனாளிகள் இச்சிப்பட்டி ஊராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டுக் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தனி நபர் கழிப்பிடம் கட்ட கையூட்டு பெற்றது தொடர்பாக கடந்த திங்க ளன்று ஒன்றிய அதிகாரிகள் இச்சிப்பட்டி ஊராட்சி அலுவல கத்திற்குச் சென்று ஆய்வு மேற் கொண்டனர். அப்போது பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கிணைப் பாளர் கே.மகேஸ்வரி என்பவரிடம், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் முன்னிலையில் எழுத்துப்பூர்வ மாக கடிதம் பெறப்பட்டது. இதில் சத்தியா என்பவர் இதுபோல் மொத்தம் 92 பயனாளிகளிடம் பணம் பெற்றதாகவும், பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கி ணைப்பாளர் கே.மகேஸ்வரி மக்களிடம் பெற்ற பணத்தைத் திரும்பத் தருவதுடன், மானியத் தொகையையும் வழங்கு வதற்குச் சம்மதித்து எழுத்துப் பூர்வமாக உறுதியளித்து கையெ ழுத்திட்டு கொடுத்துள்ளார். பொதுமக்களிடம் லஞ்சமாக பெறப்பட்ட பணம் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் வரை வருகிறது. இந்த மோசடியில் ஈடுபட்டது குறித்து துறைரீதியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாறாக, லஞ்சப் பணத்தைத் திரும்பத் தருவதாக கடிதம் எழுதி வாங்கியிருப்பது வியப்பளிப்பதாக இச்சிப்பட்டி கிராம மக்கள் கூறுகின்றனர். பய னாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய மானியத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், குற்றம் செய்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.