tamilnadu

img

மாணவிகள் விடுதியில் நுழைந்த 7 அடி நீள பாம்பு

கோவை, ஜன. 18 –  கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் 7 அடி நீள பாம்பு நுழைந்ததால் மாணவி கள் அதிர்ச்சியடைந்தனர். கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பல்வேறு மாவட்டத்தினை  சார்ந்த மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். பொங்கல் பன்டிகையை முன்னிட்டு கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில், ஒரு சில மாணவிகளே தங்கி உள்ளனர். இந்த நிலையில் விடுதிக்குள் சுமார் 7 அடி நீளமான நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை கண்ட மாணவிகள் பயந்து  கூச்ச லிட்டனர். இவர்களின் கூச்சல் கேட்டு அங்கு விரைந்த விடுதி காப்பாளர் உடனடியாக  வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதன்பின் அங்கு வந்த வனத்துறை யினர் பாம்பை பிடித்து, அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். கல்லூரி பெண்கள் விடுதியில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

;