tamilnadu

img

நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 700 கனஅடி வெள்ளம்

கோவை, செப்.6- மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 700 கனஅடி தண் ணீர் வரத்துள்ளது. இதனால், பேரூர்-வேடப்பட்டி சாலையில் புதியதாக போடப் பட்ட தற்காலிக தரைப்பாலம் மீண்டும் மூழ்கியது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சிறு வாணி நீர்பிடிப்பு, சிறுவாணி அடிவாரம், கோவை குற்றாலம், பூண்டி, வெள்ளிங் கிரிமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை யின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பேரூரில் இருந்து வேடப்பட்டி செல்ல சமீபத்தில் இரண்டாவது முறையாக போடப்பட்ட தரைப்பாலத்தை கடந்து தண் ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இத னால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  நொய்யல் ஆற்றில் தற்போது வினா டிக்கு 700 கனஅடி தண்ணீர் சென்று கொண்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்குளம், கோளாரம்பதி, நரசாம்பதி குளங்கள் நிரம் பியுள்ளதால், குளத்திற்கு செல்லும் ஷட்டர் கள் அடைக்கப்பட்டுள்ளது. செங்குளத்தின் சின்ன குளம், குறிச்சி குளம், வெள்ளலூர் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. இதற்கிடையே, கோவை மாநகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய் தது. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் வானம் மேகமூட் டத்துடன் காணப்படும் எனவும், 10 முதல் 15 மி.மீ மழை வரை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.