தாராபுரம் அருகே அத்துமீறி நில அளவை பணி:
திருப்பூர், செப். 13 - திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்னாரிபாளையம் மற்றும் மேற்கு சடையபாளையம் பகுதிகளில் விவசாய விளைநிலங்களில் அத்துமீறி நில அளவைப் பணி மேற்கொள்ளப்பட்டதை ஆட்சேபித்த பெண்கள் உள்ளிட்ட 66 விவ சாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர். புகலூர் முதல் திருச்சூர் வரை அமைக் கப்பட உள்ள 400 கிலோவாட் உயர் மின் கோபுரம் திட்டத்திற்காக வெள்ளி யன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சின்னாரிபாளையம் கிரா மத்தில் பவர்கிரிட் நிறுவனத்தினர், வரு வாய்த் துறையினர் மற்றும் காவல் துறை யினருடன் நுழைந்தனர். விளைநிலங் களின் உரிமையாளர்களான விவசாயி களுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, முன்நுழைவு அனுமதியும் இன்றி, எவ்வித தகவல் தராமலும் பவர்கிரிட், வருவாய் துறை, காவல் துறையினர் இணைந்து உழவர்களின் நிலங்களுக்குள் புகுந்தனர். அங்கு அராஜகமாக நிலத்தை அளக்க முயன்றபோது, அங்கிருந்த, பாதிக்கப்பட்ட இருபது பெண்கள் உள்ளிட்டோர் தடுத்து ஆட்சேபனை செய்தனர். ஆனால் அவர்கள் ஆட்சேபணையைப் பொருட் படுத்தாமல் 44 பேரையும் கைது செய்த காவல் துறையினர், குண்டடம் காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு சமுதாய கூடத்தில் சிறை வைத்தனர். இதையடுத்து மேற்கு சடையபாளை யத்திலும் அத்துமீறி நில அளவைப் பணியை பவர்கிரீட் மற்றும் வருவாய் துறையினர் சேர்ந்து காவல் துறை பாது காப்புடன் மேற்கொள்ள முயன்றனர். அங் கும் பெண்கள் உள்பட 22 விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்து அளவைப் பணியை தடுக்க முற்பட்டனர். இதைய டுத்து அவர்கள் 22 பேரையும் காவல் துறையினர் கைது செய்து குண்டடம் வடுகநாத சுவாமி கோவில் அருகே வேனில் அடைத்து வைத்தனர். பல்வேறு பகுதிகளிலும் விவசாய விளை நிலங்களில் எவ்வித சட்ட நடைமுறை யையும் கடைப்பிடிக்காமல், அத்துமீறி அராஜகமான முறையில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற் கொள்ள பவர்கிரீட், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் கூட்டாக நட வடிக்கை எடுத்து வருவது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந் தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.