கோவை, பிப். 3 – கோவையில், விற்பனை செய்வதற்காக 48 கிலோ கஞ்சா வுடன் வந்த ஒருவரை போதைபொருள் காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா போதைப்பொருளை வெளிமா நிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கோவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு துணை கண்கா ணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு உரிய நபரை பிடித்து விசாரித்ததில், அவர் தேனி மாவட் டம் ஆண்டிப்பட்டியைச் சோந்த அதிமன்னன் மகன் பூவேந் தன் (25) என்பது தெரியவந்தது. மேற்படி நபர் ஆந்திர மாநிலம் சென்று 48 கிலோ கஞ் சாவை விற்பனைக்காக கோவைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியும் அவரை கைது செய்து கோவை மத்தியசிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட தேனி மாவட்டத்தை சேரந்த இரண்டு நபர்களை கோவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.