tamilnadu

img

42 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

திருப்பூர், பிப். 21- திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் கீழ் 42,301 மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்றாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் 42,301 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.16 கோடியே 15 லட்சத்து 7 ஆயிரத்து 441 ஆகும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.