tamilnadu

img

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

மேட்டுப்பாளையம், ஆக.8- பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற் றப்படுவதால் பவானியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கால் கரையோரப்பகுதி மக்களுக்கு நான்காவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் மட்ட உயரம்  100 அடியாகும். தமிழக –  கேரள எல்லையில் அடர்ந்த மலைக்காட் டின் நடுவே அமைந்துள்ள இந்த அணைக்கு நீலகிரி மற்றும் கேரளப்பகுதி மலைக்காடு களே நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இங்கு பெய்யும் மழையே பில்லூர் அணையின் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக் கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித் தபடி இருந்தது. கடந்த ஆக.5 ஆம் தேதி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்த காரணத்தி னால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியது. இதனை யடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் பவானி யாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதனையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக மேட் டுப்பாளையம், சிறுமுகை பகதிகளில் உள்ள பவானியாற்று கரையோரப்பகுதி மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டது. ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லவும், ஆற்றில் இறங்கி குளிப்பதோ, மீன் பிடிக்க முயற்சிப்பதோ, பரிசல் ஓட்டுவதோ கூடாது என அறிவிக்கப் பட்டது. மேலும், தொடர்மழை காரணமாக  மீண்டும் பில்லூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. நள்ளிரவு இரண்டு மணியளவில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடியாக இருந்த கார ணத்தினால் இது அப்படியே உபரி நீராக தற்போது பவானியாற்றில் வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. பில்லூர் அணையில் இருந்து தொடர்ச்சி யாக வினாடிக்கு 20 ஆயிரம் முதல் 38 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் வியாழக்கிழமை நான்காவது நாளாக பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. வருவாய்துறை, தீயணைப்பு மீட்புத்துறை, காவல்துறையினர் கரையோர மக்க ளுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதுடன் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.