tamilnadu

img

தாராபுரத்தில் நாய் கடித்து 3 ஆடுகள் பலி

தாராபுரம், ஜூன் 27- தாராபுரத்தில் நாய் கடிக்கு ஆடுகள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. கள்ளிப்பாளையத்தில் நாய் கடித்து 3 ஆடுகள் பலி யானது. தாராபுரம் அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவர் சொந்தமாக 8 ஆடுகள் வளர்த்து வரு கிறார். செவ்வாயன்று இரவு  வழக்கம்போல் ஆடுகளை மேய்த்துவிட்டு பட்டியில்  அடைத்து சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து  பார்த்தபோது நாய் கடித்து 3 ஆடுகள்  இறந்துகிடந்தது. மேலும் 5 ஆடுகள்  காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மூர்த்தி கால்நடைத் துறையினருக்கு தகவல் அளித்தார்.  இதுகுறித்து விவசாயி மூர்த்தி கூறு கையில், தாராபுரம் பகுதியில் நாய்க்கடிக்கு ஆடுகள் பலியாவது தொடர்ந்து வருகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்கடிக்கு ஆடுகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி துணை ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.