tamilnadu

குற்றசெயல்களில் ஈடுபட்ட 24 பேர் கைது

கோவை, ஆக.6 –  கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது,  தமிழக காவல்‌ துறை இயக்கு நரின் உத்தரவுப்படி, மேற்கு மண்டல காவல்‌துறை தலைவர்‌ பெரியய்யா மற்றும்‌ கோவை சரக காவல்துறை துணைத்‌ தலை வர்‌ கார்த்திகேயன் ஆகியோரின்‌ வழி காட்டுதலின்பேரில், கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித் குமார் தலைமையில்‌ கோவை மாவட்டத்திலுள்ள ரவுடிகள்‌ மற்றும்‌ குற்றச்செயல்களில்‌ ஈடு படுபவர்கள்‌ மீது சட்ட ரீதியான நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 நபர்கள்‌ 7(1)(A) CLA- act-ன்‌ படி கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர்‌. மேலும், 11 நபர்கள்‌ கு.வி.மு.ச பிரிவு 109-ன்‌ கீழும்‌, 47 நபர்கள்‌ கு.வி.மு.ச பிரிவு 110-இன்‌ கீழும்‌ கைது செய்து நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.