tamilnadu

img

ஆணவ கொலையை தடுக்க 24 மணிநேர தனிப்பிரிவு

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்கு வெற்றி

கோவை, ஜூலை 31-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தொடர் போராட்டத்தின் எதிரொலி யாக கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் ஆணவ கொலையை தடுக்கும் நோக்கில் 24 மணி நேர தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஆணவக் கொலைகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உடுமலையில் கடந்த சில ஆண் டுகளுக்கு முன்பு சங்கர் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு  எல்லைக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ஆணவப் படுகொலை நடந் தது. இந்த ஆணவக் கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதுதொடர் பாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதற் காக தனிப்பிரிவுகள் உருவாக்க வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஆணவக்கொலை தடுப்பு தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மற்றும் கோவை மாவட்ட சமூக நல அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கலப்பு திருமணம் செய்தவர்களை மிரட் டுவது, துன்புறுத்துவது தொடர்பாக 24 மணி நேரமும் புகார்கள் கொடுக்கலாம். மேலும், புகார் தெரிவிக்க 0422-2200777, 94981 01165, 94981 81212 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.