tamilnadu

img

பிரடெரிக் ஏங்கல்ஸ் 200ஆவது பிறந்த தின கருத்தரங்கம்

சேலம், நவ.19- உலக பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான மாமேதை, உலக முதல்  மார்க்சிஸ்ட் பிரெடரிக் ஏங்கல்ஸ் அவர்களின் 200 ஆவது பிறந்த தினத்தையொட்டி  சிபிஎம் சேலம் மாநகர் வடக்கு குழு சார்பில் சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கம்யூனிசக் கோட்பாடுகளை பிரடெரிக் ஏங்கல்ஸ் வகுத்த விதம் குறித்தும், அதனை தொடர்ந்து உலக அளவில்  கம்யூனிச கருத்துகள் ஏற்றுக் கொண் டதை குறித்தும், கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங் கடபதி கருத்துரையாற்றினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் எம். முருகேசன், வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன்குமார், இடைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.