tamilnadu

img

15ம் ஆண்டு நினைவு தினம்

சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் ஸ்தாபன தலைவா் தோழர் ஆர்.பாலகிருஷ்ணனின் 15ம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவா் ஆர்.செல்வம், பொதுச் செயலாளா் பி.கே.சுகுமாறன், மாநில குழு உறுப்பினா்கள் வி.கணேசன், பி.சி.முருகன், பொருளாளர் சி.ராஜன் மற்றும் நிர்வாகிகள் பழனியப்பன்,  மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.