tamilnadu

img

வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம் கோரி மனு கொடுத்து போராட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் 4 மையங்களில் 1500 பேர் பங்கேற்பு

திருப்பூர், அக். 11 – அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் ஓய்வூதி யம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி ஆர்ப்பாட் டம் நடத்தினர். நான்கு  மையங்க ளில் நடத்தப்பட்ட இந்த போராட் டத்தில் சுமார் 1500 பேர் பங் கேற்று மனுக்கள் அளித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஊத் துக்குளி, பொங்கலூர், உடுமலை,  மடத்துக்குளம்  ஆகிய நான்கு மையங்களில் இந்த மனுக் கொடுக் கும்  போராட்டம் வெள்ளியன்று  நடத்தப்பட்டது. ஊத்துக்குளி நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக 600 பெண்கள் உட்பட 700 பேர் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஊத்துக்குளி வட்டாட் சியர் கார்த்திகேயன் பொது மக்க ளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் மொத்தம் 600 தனித்தனி மனுக்கள் வழங்கப்பட்டன. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்க ஊத்துக்குளி தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தவிச தாலுகா செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, மாதர் சங்க தாலுக்கா செயலாளர் கே.சரஸ்வதி, சிஐடியு பொது தொழிலாளர் சங்க தலைவர் கே.பெரியசாமி, அஇவிதொச தாலுகா செயலாளர் க.பிரகாஷ், குன்னத்தூர் எஸ்.பன்னீர்செல் வம் ஆகியோர் உரையாற்றினர். முடிவில் கருப்புசாமி நன்றி கூறி னார்.

உடுமலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற இந்த இயக்கத்துக்கு உடு மலை ஒன்றிய விவசாயத் தொழி லாளர் சங்கத் தலைவர் மாசாணி தலைமை வகித்தார். கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் உரையாற்றினார். இந்த மனுக் கொடுக்கும் இயக்கத்தில் மொத் தம் 455 மனுக்கள் கொடுக்கப் பட்டன. மடத்துக்குளத்தில் நடை பெற்ற போராட்டத்தில் சுமார் 300 பேர் பங்கேற்றனர். 240 மனுக்கள் அளித்தனர். மடத்துக் குளம்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போ ராட்டத்துக்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணி யம், தாலுகா தலைவர் எஸ்.பழனி சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மார்க் சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் வாழ்த்திப் பேசினார். அதேபோல் பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மனுக் கொடுக்கும் ஆர்ப்பாட்ட இயக்கத்துக்கு விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். இப்போராட்டத்தை விளக்கி ஒன்றியச் செயலாளர் சுந்தரம், துணைச் செயலாளர் சண்மு கம் ஆகியோர் பேசினர். போராட் டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ராதேவி, பனி யன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள்ளிட் டோர் பேசினர். இந்த மனுக்  கொடுக்கும் ஆர்ப்பாட்ட இயக்கத் தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டு 168 மனுக்கள் கொடுத் தனர்.

வட்டாட்சியருக்கு கண்டனம்

உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, வட்டாட்சியர் தாய னந்தன் தன்னிடம் மனு தர வருவார்கள் எனத் தெரிந்து, அதை தவிர்க்கும் வகையில் தன்னு டைய வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். பின்னர் பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் வட்டாட் சியர் கண்டிப்பாக வர வேண்டும் என கோரிக்கை யால், வேறு வழி இல்லாமல் பலமணி நேரம் பின்னர்திரும்பி வந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அதற்கான ஒப்புகைச் சீட்டு பின்னர் தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதேபோல், மடத்துகுளம் வட்டாட்சியர் பழனியம்மாள் காலைமுதல் அலுவலகத்திற்கு வரவில்லை. பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், பல மணி நேரம் கழித்து வந்த வட்டாட்சியர் மனுக்கைளை பெற்றுக்கொண்டார். அப்போது அனைவரிடம் கடுமையாக பேசியுள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உள்ளிட்டவர்களை அமர அனுமதிக்காமல் அலு வலகத்தில் இருந்த அனைத்து நாற்காலிகளை யும் எடுத்து உள்ளே வைத்து உள்ளார். இவ்வாறு மக்களின் தேவைகளையும், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயல்படும் உடுமலை மற்றும் மடத்துகுளம்  வட்டாட்சியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இது குறித்து விவசாய தொழிலாளர்கள்  சங்கத்தின் நிர்வாகிகள் கூறும் போது, மக்களின் நலனுக்காக வேலை செய்யவேண்டிய வட் டாட்சியர்கள், மக்களை மதிக்காத வட்டாட்சி யர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அதிகாரிகளின் நடவடிக் கையைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.