tamilnadu

img

கோவை: தீக்ததிர் நாளிதழுக்கு 137 சந்தா ஒப்படைப்பு

கோவை, மார்ச் 19 - கோவையில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு பேரவை கூட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற் றன.    மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சேர்க்கப்பட்ட தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் பேரவைக் கூட்டம் சிவானந்த புரம் ஒன்றி யக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில், 73 சந்தாக்களுக்கான 1 லட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாயும், மார்க் சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி யாக 63 ஆயிரம் ரூபாயும் தலை வர்களிடம்  வழங்கப்பட்டது.  இந் நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு செய லாளர் ஆர்.கோபால்  மற்றும்  செந் தில்குமார், வெள்ளிங்கிரி உள் ளிட்டோர் பங்கேற்றேனர். இதேபோல் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியக்குழுவின் பேரவைக் கூட்டம் துடியலூரில் நடைபெற்றது. இதில் 21 சந்தாக் கான தொகை 22 ஆயிரத்து 400 ரூபாய் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் என்.பாலமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் கேசவமணி மற்றும்  சிவராஜ், தேவராஜ், மோகன்ராஜ்,  விஜயா, பழனிசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர். கோவை வடக்கு நகரக்குழு சார்பில் நடைபெற்ற சந்தா ஒப்ப டைப்பு பேரவைக் கூட்டமானது கணபதி இன்ஜினியரிங் சங்கத் தில் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.  இதில் 26 சந்தாக்க ளுக்கான தொகை  31  ஆயிரத்து  300  ரூபாயும்,  கட்சியின் வளர்ச்சி  நிதியாக 50 ஆயிரம் ரூபாயும்  தலைவர்களிடம் வழங்கப்பட் டது. இதில் வடக்கு  நகரக்குழு செயலாளர்  என்.ஆர்.முருகேசன்  மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் செல்வம்,  ரத்தினசாமி,  சுந்தரம்,  நாராயணசாமி, கணேசன், மகா லிங்கம், சிவக்குமார், ஆனந்தன், விஜயகுமார், நாச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை கிழக்கு நகரக்குழு சார்பில் நடைபெற்ற சந்தா ஒப்ப டைப்பு பேரவைக் கூட்டம் கட்சி யின் காந்திபுரம் மாவட்டக் குழு அலுவலகத்தில் த.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 17 சந்தாக்களுக்கான தொகை 25  ஆயிரத்து 500 ரூபா யும், கட்சியின் வளர்ச்சி  நிதி யாக  48 ஆயிரத்து  500  ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் கிழக்கு நக ரக்குழு செயலாளர் என்.ஜாகீர், நகரக்குழு உறுப்பினர்கள் கிருஷ் ணசாமி,  செல்வராஜ்,  ராஜன், மாணிக்கவாசகம், மணி, சிவா, விஜயபாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்ட செயலாளர் வி.இரா மமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அஐய்குமார், கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் சந்தாக்களை பெற்றுக்கொண்டு  உரையாற்றினர்.