கோவை, ஆக.7 கோவை அன்னூர் அருகே சட்ட விரோதமாக ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்த 13 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். கோவையில் தடைசெய்யப்பட்ட மூன்று எண் கொண்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, காளப்பட்டி, காப்பிக்கடை, கோவில்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆன்லைன் லாட்டரி விற் பனை அதிகமாக நடைபெற்று வந்தது. இதுகுறித்து தொடர்ச்சியான புகார்கள் வந்தபோதும், எவ்வித நட வடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்நிலையில் அன்னூர் காவல்நிலைய சரகம் அன்னூர் - புளியம்பட்டி சாலையில் செல்லப்பம்பாளையம் பேருந்து நிறுத்தம் பின்புறம் அமைந்துள்ள சுந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தகர கொட்டகையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல்நிலைய பயிற்சி துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் மற்றும் தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, மூன்று வயர்லெஸ் போர்ட்ட புள் பிரிண்டர் வைத்து லாட்டரி வாங்க வரும் வாடிக்கை யாளர்களுக்கு அவர்கள் சொல்லும் மூன்று நம்பரை பிரிண்ட் செய்து கொடுத்துவிட்டு லாட்டரி சீட்டு தொகையை வசூல் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாட்டரி தடை சட்டத்தின் கீழ் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், துரைசாமி, ஜீவா, ரமேஷ், நவீன், செந்தில், செந்தில்குமார், வெள்ளிங்கிரி, பழனிச்சாமி, வேலுச்சாமி, தர்மன், அருள் பிரகாசம், பொன் ராஜ், மரிய லூயிஸ் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மூன்று வயர்லெஸ் போர்ட்டபுள் பிரிண்டர், 22 ஆண்ட்ராய்டு செல்போன், நான்கு சக்கர வாகனம் மற்றும் ரூ.1,09,609 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாகியுள்ள சிலரை காவல்துறையினர தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார்.