tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் 10 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் - அ.சவுந்தரராஜன் பேச்சு

தருமபுரி, ஜூன் 15- மோட்டார் வாகனச் சட்டத்தி ருத்தம் அமலுக்கு வந்தால் 10  கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்ப டுவர். ஆகவே, இச்சட்டத் திருத்தத் திற்கு எதிராகத் தொடர்ந்து போரா டுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்  செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக, தருமபுரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந் திப்பில் அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல்முடிந்த பிறகு மத்திய அரசு கூறியுள்ள சட்டத்திருத்த அறிவிப்பானது தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஏனெனில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் சுமார் 10 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும். 44 தொழிலாளர் உறவு சட்டங்களை 4 பிரிவுகளாக பிரித்து சுருக்கி முத லாளிகளுக்குச் சாதகமாக சட்டத்தை  மாற்றுகின்றனர். இந்த சட்ட திருத் தத்தால் கார்ப்பரேட் கம்பெனிக ளுக்கும், வெளிநாட்டு முதலாளி களுக்கும் சாதகமாக அமையும். ஆகவே, இதை எதிர்த்து சிஐடியு உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் தொடர்ந்து போராடும் என்றார்.

நீர்நிலைகளை பாதுகாத்திடுக

மேலும் அவர் கூறுகையில், தொடர் வறட்சியினால் தமிழகத்தில் கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. தண்ணீர் இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட் டும் மத்திய பாஜக மோடி அரசு தமிழகத்துக்கு தண்ணீர் விட மறுக் கிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. தமிழகத்தில்75 ஒன்றியங்களில் நீர்நிலைகள் அபாயகரமாக உள் ளது.அதேநேரம், நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், நீர்மட்டத்தை  மேம்படுத்ததமிழக அரசுகள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நீர்நிலைகளை மேம்ப டுத்த உடனடியாகமத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.

வேலைவாய்பை உருவாக்கிடுக
இதேபோல், தருமபுரியில் சிப் காட் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பின்தங்கிய தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்கான எந்த நடவடிக்கை யும் அரசு எடுக்கவில்லை. கிராமப் புற இளைஞர்கள் வேலை தேடி பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநி லங்களுக்கு செல்லும் நிலைமை உள்ளது. எனவே அரசு சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.   மேலும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் விவசாய உற்பத்தி சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். குறிப்பாக மாம்பழம் விளைச்சல் உள்ளது. மாம்பழக்கூல் உற்பத்தி தொழிற்சாலை அதே போல், பூ சாகுடி அதிகமாக உள்ள நிலையில், பூ உற்பத்தியை வைத்து செண்டுதொழிற்சாலையை உருவாக்கவேண்டும்.

குறைந்தபட்ச கூலியை உறுதிசெய்
ஆஷா திட்டத்தில் வேலை செய் யும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.610 மட்டும் வழங்கப்படுகிறது. இச் சூழலில் இந்த பணியாளர்களுக்கு கடந்த 6 மாதமாகச் சம்பளம் வழங்க வில்லை. இவர்களுக்கான சம் பளத்தை உயர்த்தி, மாதாமாதம் ஊதி யம் வழங்கிட வேண்டும்.  மேலும், கார்மெண்டசில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு குறைந்த கூலி வழங் கப்படுகிறது. இதுகுறித்து தொழிற் சங்கம் புகார் அளித்தால் தொழி லாளர் நலத்துறை முறையான நட வடிக்கை எடுப்பதில்லை. ஆகவே, தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டிய குறைந்தபட்சக் கூலி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தொழிற்சங்கம் அமைத்தால் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கும் போக்கு தொடர்கிறது. தருமபுரி சரவணா ஸ்பின்னிங் மில், இண்டிகரா கிரானைட் கம்பெனி ஆகிய இடங் களில் தொழிற்சங்கம் அமைத்த தால் தொழிலாளர்கள் பழிவாங்கப் பட்டுள்ளனர். தொழிலாளர் நலத் துறை தொழிலாளிகள் பக்கம் நின்று  தொழிற்சங்க உரிமையைப் பாது காக்கவும், தொழிலாளியைப் பாது காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு
இதேபோல், அங்கன்வாடிகளில் எல்கேஜி வகுப்புகள் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி எல்கேஜி ஆசிரியர் களாகப் பதவி உயர்வு வழங்கி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், 24 மணிநேரமும் வர்த்தக நிறு வனங்கள் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படிசெய்யப்பட்டால் 8 மணிநேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். பெண்களை 8 மணிக்குமேல் பணியில் அமர்த்தக்கூடாது. பெண்கள் இரவு  நேரங்களில் வேலை செய்ய சம்மதித் தால் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரரா சன் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சிஐடியு மாநில துணைத் தலை வர் எம்.சந்திரன், மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன், மாவட்ட செயலாளர் சி.நாகராசன், சிஐடியு மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் எம்.சுருளிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.