எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 22 - இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமலாகிறது . அனைவரும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். மிகவும் அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு எடுத்து வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பினை நல்கி, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசுடன் மக்களும் இணைந்து இந்த கொரோனா வைரஸ் நோயினை வென்று, நோயற்ற தமிழ்நாட்டினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்
கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்துள்ள சூழ்நிலை அசாதாரணமானது. சிறு தவறு கூட நிலைமையை மோசமாக்கிவிடக்கூடும். உள்ளாட்சி அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தலையிட வேண்டும். வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். திருமணங்களும் பொது நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய எச்சரிக்கை தொடர வேண்டும்.