tamilnadu

img

செயின் பறிப்பில் ஈடுபட்ட பாஜக முன்னாள் எம்.பி.

கொல்கத்தா:
கொல்கத்தாவில் இளைஞர் ஒருவரை அடித்து உதைத்து அவரது செயினை பறித்ததாக பாஜக கட்சியைச் சேர்ந்த அனுபம்ஹஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.கொல்கத்தாவின் காஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராய். கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதி (பப்) ஒன்றுக்குச் பெண் தோழி மற் றும் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அனுபம் ஹஸ்ரா, சுரேஷ் ராயை கடுமையாகத் தாக்கி,
அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். சுரேஷ் ராயின், தோழியையும் தாக்க முயன்றுள்ளார்.இதுதொடர்பாக சுரேஷ் ராய் அளித்த புகாரின் பேரிலும், ‘பப்’பில் உள்ள சிசிடிவிகாட்சிகளை வைத்தும், போலீசார் வழக்குபதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

;