tamilnadu

img

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு....

கொல்கத்தா:
மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரரான கார்த்திக் பானர்ஜி உள்ளிட்டோருடன் அம்மாநில தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்கா மதுபானங்களை பகிர்ந்துகொள்வதை போன்ற ஒரு போலி புகைப்படத்தை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சுப்ரியோ டுவிட்டரில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.இதற்காகவே, ஐபிசி பிரிவுகள் 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழிபோன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறுகுழுக்களிடையே பகைமையை ஊக்குவித் தல்), 505 (பொது குறும்புகளை ஏற்படுத்தும் அறிக்கைகள் வெளியிடுதல்) மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ்,  பாபுல் சுப்ரியோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலி பதிவுகள், புகைப்படங்களைப் பகிர்வது தண்டனைக்குரிய குற்றம் என்றவகையில், நாங்கள் சுப்ரியோ மீது மட்டுமல்ல, இந்த போலி புகைப்படத்தைப் பகிர்ந்தவேறு சிலருக்கு எதிராகவும வழக்குத் தாக்கல்செய்துள்ளோம் என்று காவல்துறை அதிகாரிஒருவர் கூறியுள்ளார். மேலும், சுப்ரியோ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் சில பிரிவுகள் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;