tamilnadu

img

கேரள நர்சுகளுக்கு வளைகுடாவில் வேலை தகுதியில் தளர்வு; சம்பளம் அதிகரிப்பு

மலப்புறம், ஜுன் 25- கோவிட்-19 அச்சு றுத்தலை எதிர்கொள்ள அதிக அளவில் மலையாள செவிலியர்களை வளை குடா நாடுகள் நாடி யுள்ளன. தற்போதுள்ள சம்ப ளத்தைவிட இதற்காக பெரிய சம்பளத்தை வழங்க இந்நா டுகள் முன்வந்துள்ளன. நிய மன உத்தரவில்  சட்ட நடை முறைகளை தளர்த்தி சாட்டட்  விமானங்களில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படு கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் நாடகள் செவிலியர்களுக்கான சிறப்பு விமானங்களை பட்டி யலிட்டுள்ளன. ஐக்கிய அரபு  அமீரகத்தின் மிக உயர்ந்த சம்பளம் 8,000 திர்ஹா (ரூ . 1,60,000). நர்சிங் நியமனங்க ளுக்கு சிறப்பு மருத்துவ பயிற்சியில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும் என்கிற நிப ந்தனையை இரு நாடுக ளும் விலக்கி உள்ளன. இது  இலவசம் ஆறுமாத நியம னத்துக்கான செயலாக்க கட்டணம் ரூ .34,570. தனியார் முகவர்கள் ரூ .1 லட்சம் வரை வசூலிக்கின்றனர். இப்போது கட்டணமின்றி இலவசமாக இந்த நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான செவிலியர் கா லிப்பணியிடங்கள் உள்ளன. இங்கிலாந்தில் மட்டும் 300 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ஆண்டுக்கு ரூ .24 லட்சம். ஐரோப்பிய நாடு கள் நியமனத்திற்கான தகுதி யில் சலுகைகளை வழங்க முன்வரவில்லை. சிறப்பு விமானங்கள் எதுவும் பட்டி யலிடப்படவில்லை. இந்தி யாவின் பிற மாநிலங்களும் மலையாள செவிலியர்களை நாடுகின்றன. மகாராஷ்டி ராவில் உள்ள மருத்துவம னைகள் கேரளத்தில் உள்ள தைவிட மூன்று மடங்கு சம்ப ளத்தை வழங்க முன்வந்து ள்ளன. தில்லியில் உள்ள மிக ப்பெரிய முக்கிய மருத்துவ மனைகளிலும் காலியி டங்கள் உள்ளன. மலையாள செவிலியர்க ளுக்கு அதிகளவில் வெளி நாடுகளில் வரவேற்பு உள்ளது. இந்தியாவில் இரு ந்து அதிக எண்ணிக்கையி லான செவிலியர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்புவது கேரளமாகும். கோவிட் பர வுவதால், பலர் வேலையை விட்டுவிட்டு வீடு திரும்பி னர். நோயாளிகளின் எண்ணி க்கை அதிகரித்து வரு வது மருத்துவமனை நட வடிக்கைகளை கடுமையாக பாதிக்கிறது. இதை சமா ளிக்க, அதிகமான செவிலி யர்கள் நியமிக்கப்படுகி றார்கள். வளைகுடாவுக்கான சாட்டட் விமானங்கள் 10  நாட்களுக்குள் வரும் என ஓ டெபெக் நிர்வாக இயக்குநர்.கே.ஏ அனூப் கூறினார். வேலை வாய்ப்புக்கான அரசு நிறுவனமான ஓடெ பெக் (www.odepc.kerala.gov.in) மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை  3 ஆம் தேதிக்குள் recruit@ odepc என்கிற முகவரியில் ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பிக்கலாம்.