திருவனந்தபுரம், ஜுலை 5- கேரளத்தில் கோவிட் நில வரம் தொடர்ந்தாலும் உள் ளாட்சி தேர்தலில் மாற்றமிருக் காது. தேர்தல் நிறைவு கொண் டாட்டம் (கலாசக்கொட்டு) உட்பட கூட்டமாக சேர்ந்து நடத் தும் பிரச்சார நிகழ்ச்சிகள் கண் டிப்பாக தடை செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையர் வி.பாஸ் கரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதா வது: ஒவ்வொரு இடத்தின் தன்மைக்கு ஏற்ப வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வீடுகளுக்கு செல்வது குறித்த கட்டுப்பாடுகள் ஏற்படுத் தப்படும். இது உட்பட கண்டிப்பான வழி முறைகள் தேர்தல் நடைமுறை சட்டத்தில் கொண்டுவரப்படும். சுகாதார வழிமுறை களை துல்லியமாக கடைப்பிடித்து தேர்தல் நடத்தலாம் என்பதே மாநில தேர்தல் ஆணை யத்தின் மதிப்பீடு.
இதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப் படும். 1.25 லட்சத்துக்கும் மேற் பட்ட அதிகாரிகளுக்கு முக கவச மும் கையுறையும் வழங்கப்படும். கூடுதல் செலவுகள் அரசாங்கத் தின் கவனத்திற்கு கொண்டு வரப் படும். சாதாரண நிலையில் தேர்த லுக்கு சுமார் ரூ.150 கோடி செல வாகும். சுகாதார வல்லுநர்களுடன் ஆலோ சனை நடத்திய பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டம் நடத்தி விரிவாக விவாதிக்கப்படும். விரிவான வழிமுறைகள் தயாரித்து அரசி டம் சமர்ப்பிக்கப்படும். கோவிட் பாதிக்கப் பட்டவர்களுக்கும் கண்காணிப்பில் உள்ள வர்களுக்கும் 65 வயதைக் கடந்தவர்களுக் கும் அஞ்சல் வாக்கு மற்றும் ப்ராக்ஸி வாக்கு தேவைக்கேற்ப அனுமதிக்கப்படும். இதற் கான உத்தரவு பிறப்பிக்க இந்த மாத இறுதி யில் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். கோவிட் பாதுகாப்புடன் தேர்தலை நடத்தி முடிப்பதே இதன் நோக்கம் என்று வி.பாஸ்கரன் தெரிவித்தார்.