tamilnadu

img

லைப் திட்டத்தில் கட்டியவை 2,19,154 வீடுகள் ஜனவரியில் 100 அடுக்குமாடி வளாகங்கள் அரசின் தலையீடுக்கு கிடைத்த வெற்றி: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்,  மே 23- கேரளத்தில் லைப் திட்டத்தின் கீழ் இரண்டு பகு திகளாக 2,19,154 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பல காரணங்களால் கட்டு மானப் பணிகள் நின்றுபோன முதல் பகுதியில் 52,084 வீடுகள் கட்டி முடிக்கப்பட் டன. இந்த பகுதியினரில் தகு தியான 54,169 நபர்கள் கண்ட றியப்பட்டனர். அதில் 96.15 சதவிகிதம் வீடுகள் கட்டி முடி க்கப்பட்டன. மீதமுள்ள 1266 வீடுகளின் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டாவது பகுதியில் நிலம் உள்ள வீடற்றவர்கள் பரிசீலிக்கப்பட்டனர். இதில்  77,424 வீடுகள் (81.38 சதவிகி தம்) கட்டி முடிக்கப்பட்டன. மீதமுள்ள 17,712 வீடுகளில் புதிதாக ஒப்புதல் அளிக்கப் பட்ட 2065 வீடுகள் தவிர மற்ற வீடுகள் கட்டும் பணி நடந்த வருகிறது.

இரண்டாம் கட்டமாக பிஎம்ஏஒய் (நகர்)- 48,446, ஏஎம்ஏஒய் (ஊரகம்)- 16, 703, வீடுகளும், பட்டியலி னத்தோர்க்கு- 1745, பழங்குடி யினர்க்கு- 1745, மீன் தொழிலா ளர்களுக்கு- 3734 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த பயனாளிகளுக்கு ரூ.3332 கோடி நிதி உதவியாக வழங்கப்பட்டது. இந்த பகு தியில் தலா ரூ.4 லட்சம் அர சின் நிதி உதவியாக வழங்கப் படுகிறது. நிலமோ, வீடோ இல்லத வர்களின் மறுவாழ்வுக்கா னது மூன்றாம் பகுதி. இதில் தகுதியான 1,06,792 நபர்கள் கண்டறியப்பட்டனர். தலா 80  அல்லது அதற்கு குறைவான பயனாளிகளைக் கொண்ட  627 பஞ்சாயத்துகளில் நிலங் கள் கண்டறியப்பட்டுள்ளன.

100 மையங்களில்  அடுக்குமாடி
அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்ட சுமார் 300 இடங்களில் அரசு நிலங்களை லைப் மிஷன் கண்டறிந்துள்ளது. 7 அடுக்குமாடி ளாகங்களின் கட்டுமானப்பணி துவக்கப் பட்டுள்ளன. 9 பணிகள் உடனடியாக துவங்க உள்ளன. இந்த 16 வளாகங்களின் பணிகளும் டிசம்பரில் நிறை வடையும். 15 வளாகங்க ளுக்கு டெண்டர் கோரப்பட்டு ள்ளன. இவை உட்பட சுமார் 100 வளாகங்கள் 2021 ஜனவ ரிக்குள் கட்டி முடிக்கப்படும். நெருக்கடிகளுக்கு மத்தி யிலும் 2.19 லட்சம் பேருக்கு  குடியிருப்பு வசதி வழங்கியி ருப்பது அரசின் தலையீடுக்கு  கிடைத்த வெற்றியாகும். லைப் திட்டத்தின் வளர்ச்சி யில் உள்ளாட்சி அமைப்புகள்  பாராட்டத்தக்க பங்கு வகிக்கி ன்றன என்று முதல்வர் கூறி னார்.