tamilnadu

தென்மேற்கு பருவமழை 8-ம் தேதி தொடங்குகிறது

திருவனந்தபுரம், ஜூன் 5- கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 8 ஆம் தேதி தொடங்கும் என்று இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பா ர்க்கப்பட்ட நிலையில்,  ஜூன் 6 ஆம் தேதி மழை தொடங்க வாய்ப் புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனிடையே, பருவமழை தொடங்கு வதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருகிற 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவமழை தற்போது மாலத்தீவுகள், குமரி கடல்பகுதிகள் தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மிதமாக காணப்படுகிறது. தென் மேற்கு வங்கக்கடல் தென் கிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அறிகுறிகள் அதிகரிக்கும் என தெரி வித்துள்ளது.

;