காசர்கோடு, ஜூலை 26- கோவிட் கண்காணிப்பில் வீட்டில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை பாம்பு கடித்தது. அல றல் சத்தம் கேட்ட வீட்டுக்குள் கோவிட் பீதியால் நுழைய மற்றவர்கள் தயக்கம் காட்டினர். துணிச்சலாக பாய்ந்து சென்று குழந்தையை காப்பாற்றிய சிபிஎம் கிளை செயலாளரை கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். கடந்த ஜூலை 21 இரவு காசர்கோடு பாணத்தூர் வட்டக்கயத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து காப்பாற் றுங்கள் என்கிற அலறல் சத்தம் அந்த பகுதியை அதிர வைத்தது. ஒன்றரை வயதுள்ள குழந்தையை பாம்பு கடித்ததைத் தொடர்ந்தே அந்த இளம் தம்பதியினரி டமிருந்து அந்த கூக்குரல் எழுந்தது. குழந்தையை கடித்தது கொடிய விஷமுள்ள அணலி வகையைச் சேர்ந்த பாம்பாகும். ஆனால் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள அந்த வீட்டை நெருங்க அனை வரும் அச்சமடைந்தனர். காரணம் கோவிட் தொற்றைத் தொடர்ந்து அவர்கள் வீட்டு கண்காணிப்பில் இருந்தனர். ஆனால் காப்பாற்றுவதற்காக சிபிஎம் கிளைச் செயலாளர் ஜினில் மாத்யூ துணிச்சலாக அந்த வீட்டுக்குள் பாய்ந்து சென்றார். பாம்பு கடிக்கு உள்ளான குழந்தையை வாரியெடுத்தார். ஆம்புலன்ஸ் வர வழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவர்கள் குழந்தைக்கு மருந்து கொடுத்து விஷம் இறக்கி விரைவாக ஆபத்திலிருந்து மீட்டனர். மறுநாள் இயல்பு நிலைக்கு குழந்தை வந்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தை கோவிட் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிந்தது. ஜினிலும் சுயகண்காணிப்புக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு தனிமைக்கு சென்றார். கொடியேரியின் பாராட்டு ஜினில் மாத்யூவின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற மனிதாபிமானத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தோழரின் முன்மாதிரியான மீட்பு நடவடிக்கை மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு மனிதரும் பாராட்டத்தக்கதாகும். பீகாரில் இருந்து வந்த ஆசிரிய தம்பதிகளும் குழந்தையும் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகி கண்காணிப்பில் இருந்ததால் பாம்பு கடிக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற பலரும் தயங்கி நின்றனர்.
அபோது குழந்தையின் உயிரை பாதுகாப்பதற்காக தோழர் ஜினித் விரைந்து சென்றுள்ளார். குழந்தையை கடித்த அணலியை அடித்துக் கொன்று பையில் எடுத்துக் கொண்டு, குழந்தையை மார்பில் அணைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரான நண்பர் பினுவின் உதவியுடன் காஞ்ஞாங்காடு மாவட்ட மருத்து வமனைக்கும் அங்கிருந்து பரியாரம் மருத்துவக் கல்லூரிக்கும் விரைந்துள்ளார் தோழர். மதிப்புமிக்க ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார். குழந்தையை காப்பாற்றிய சுகாதார ஊழியர்களுக்கும் பாராட்டுகள். தோழர் ஜினில் மாத்யூ இப்போது கண்காணிப்பில் உள்ளார். முழுமையாக நலம் பெற்று வரும் அவர் நாட்டின் இதயத்துடிப்பாக தோழர் போற்றப்படுவார். அனைவரும் தோழருக்கு உறுதுணையாக உள்ள னர். வாழ்த்துகள் என முகநூல் பதிவில் தெரிவித்துள் ளார்.