tamilnadu

img

வேலைவாய்ப்புக்கான நடைமுறை வெளிப்படையானது ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் மூன்றில் ஒரு பங்கு குறைவு ரமேஷ் சென்னித்தலாவுக்கு கேரள முதல்வரின் பதில்

திருவனந்தபுரம், ஜுலை 19- கேரளத்தில் வேலைவாய்ப்பில் வெளிப் படைத்தன்மை இருக்க வேண்டும். இது தற்போ தைய அரசின் தெளிவான நிலைப்பாடு என்று முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தி யுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னி தாலாவின் கடிதத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்துள்ள பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

முதல்வரின் விரிவான பதில் முழு வடிவத்தில்:           

பிரியமுள்ள திரு.ரமேஷ் சென்னித்தலா, 14.07.2020 ஆம் தேதியிட்ட தங்களது கடிதம் கிடைத்தது. கடிதத்தில் தங்களது குற்றச்சாட்டு முக்கியமாக கீழே கூறப்படும் விசயங்களைப் பற்றியதாகும்.

♦ எந்தவொரு அளவுகோல்களையும் பின்பற்றாமல் அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் சட்டவிரோத நியமனங்கள் நடந்ததாக தகவல்கள் உள்ளன.

♦ பிஎஸ்சி மற்றும் வேலைவாய்ப்பு நடைமுறைகளைத் தவிர்த்து எல்டிஎப் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோரை நியமித்துள்ளது.

♦ போலி கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட போலி ஆவணங்களின் அடிப்படையில் இவர்களில் பலரும் நியமனம் பெற்றுள்ளனர்.

♦ கீழ் நிலை எழுத்தர், கடை நிலை ஊழியர்போன்ற பணியிடங்களுக்கான நியமனங்களின் தரவரிசை பட்டியல்கள் பிஎஸ்சியின் பார்வைக்காகமட்டுமே வைக்கப்படுகின்றன. தரவரிசைப் பட்டியல்களில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியமனங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியல்களின் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி மற்றும் வேலை தேடுவோரின் கோரிக்கையை அரசு கருத்தில் கொள்ளவில்லை.

♦ உமாதேவி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலை புறக்கணித்து நிரந்தர மற்றும் அதிகாரபூர்வமற்ற நியமனங்கள் செய்யப்படுகின்றன.

♦ அனைத்து அதிகாரபூர்வமற்ற ஒப்பந்த/தினசரி ஊதிய நியமனங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் மற்றும் அவர்களின் கல்வித்தகுதிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.                                       

1,33,132 பேர் பிஎஸ்சி மூலம் நியமனம்
வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே தற்போதைய அரசின் தெளிவான நிலைப்பாடு. அரசமைப்பு சாசன அமைப்பான பி.எஸ்.சி மூலம் வெளிப்படையான நியமனங்கள் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. காலி யிடங்கள் பிஎஸ்சிக்கு அறிவிக்கவும் அவற்றை நிரப்பவும் அரசு முறையான நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. 2016இல் இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு 2020 ஏப்ரல் 30 வரை பிஎஸ்சி மூலம் 1,33,132 பேர் நியமனம் செய்யப்பட்டனர். முந்தைய யுடிஎப் அரசு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் 2015 ஜுன் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் அறிவித்தபடி 1,23,104 பேருக்கு பிஎஸ்சி மூலம் நியமனம் வழங்கப்பட்டது.

15 ஆயிரம் புதிய பணியிடங்கள்
சுகாதார- சமூக நீதித்துறையில் இதுவரை 5985 பணியிடங்கள் உருவாக்கி நியமனம் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறை அமைப்பை வலுப் படுத்துவதன் ஒரு பகுதியாக, 1990 புதிய பணி யிடங்கள் பிஎஸ்சி மூலம் நியமனம் செய்யப்பட் டுள்ளன. காவல்துறையில் 4933 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. பொதுக்கல்வித் துறை யில் விரிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த துறையில் மேல்நிலைப்பள்ளி அளவில் மட்டும் 3540 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  படித்த வேலை தேடுவோரை தகுதி அடிப்படை யில் நியமனம் செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. அரசு நிறுவனங்களில் சிறப்பு விதிகளைத் தயா ரிக்கவும் நியமனங்களை பிஎஸ்சியிடம் ஒப்ப டைப்பதற்கான செயல்முறை நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கேரள நிர்வாக தீர்ப்பாயம், ஐ.எம்.ஜி, வீட்டுவசதி ஆணையம், கேரள மாநில கட்டுமான மையம், சிறுபான்மை நல இயக்குநர கம், கேரள மாநில சிறுபான்மை மேம்பாட்டு நிதிக் கழகம், இளைஞர் நல வாரியம், கேரள மொழி நிறு வனம் மற்றும் சிறுவர் இலக்கிய நிறுவனம் ஆகிய வற்றில் சிறப்பு விதிகளை வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கழகங்கள் போன்ற 52 நிறுவனங்களில் நியமனங்கள் ஏற்கனவே பிஎஸ்சி-க்கு ஒப்படைக்கப்பட்டு, நிய மனம் தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நியமன விதிகளை வகுக்கவும் பிஎஸ்சி-க்கு விட்டுச் செல்வதற்கான நடைமுறைகளை இது வரை பின்பற்றாத நிறுவனங்கள், அதை சரியான நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு சிறப்பு விதி இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். அனைத்து தகவல்களும் இங்கே குறிப்பிடப்படவில்லை. (விவரங்கள் பிஎஸ்சி-யிடமிருந்தும் நிர்வாக சீர்திருத்த ஆணையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.)

தற்காலிக ஊழியர் நியமனம் குறைந்தது
நிதியாண்டு மற்றும் தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கை வருமாறு: 

2011- 12... 31,899
2012- 13.. 25,136
2020- 21... 11,674

இதிலிருந்து தெளிவாவது ஒப்பந்த/ தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வோரின் எண்ணிக்கை யுடிஎப் ஆட்சி காலத்தில் இப்போது உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகம் என்ப தாகும். இதை பரிசீலிக்காமல் எல்டிஎப் ஆட்சி காலத்தில் பிஎஸ்சியை பார்வையாளராக்கி அதி காரபூர்வமற்ற நியமனங்கள் நடத்தப்பட்டதாக கூறுவதில் எந்த ஒரு அடிப்படையும் இல்லை. கடந்த யுடிஎப் ஆட்சி காலத்தில் அன்றைய முதல்வர் 2015 நவம்பர் 30இல் சட்டமன்றத்தில் அளித்த பதிலில் புதுதில்லி கேரள ஹவுசில் 3 ஆண்டுகள் பணியாற்றிய 40 பேரை நிரந்தரம் செய்ததாக அறிவித்திருந்தார். 

இந்த அரசு கேரள ஹவுஸின் நியமனங்களை தகுதி-இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு இணங்க  தேர்வை நடத்துவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் இந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவ னத்திடம் ஒப்படைக்கவும். விளம்பரம் செய்து தேர்வும் நேர்காணலும் நடத்தி நியமனம் செய்வ தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு தெரிந்ததுபோல், ஒப்பந்த / ஆலோசனை நியமனங்கள் சில சூழ்நிலை களில் அதிகபட்சம் ஒரு வருடம் என்பது கட்டாய மாகும். உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் சிறப்புத் திறன்கள் மற்றும் நிபுணத்து வம் வாய்ந்த நபர்கள் தேவைப்படும் போது செயல்முறை வெளிப்படைத்தன்மையை (Process Integrity) உறுதிப்படுத்த குறுகிய கால நியமனங்கள் ஆலோசனை நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன. இவை பிஎஸ்சி அறிவிக்க வேண்டிய பணியிடங்களும் அல்ல.

தங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டிய ஸ்டேட் ஆப் கர்நாடகா Vs உமாதேவி & அதர்ஸ் என்கிற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு: “ . . . . . . . . . . . .of duly qualified persons in duly sanctioned vacant posts might have been made and the employees have continued to work for ten years or more but without the intervention of orders of courts or of tribunals. The question of regularization of the services of such employees may have to be considered on merits in the light of the principles settled by this Court in the cases above referred to and in the light of the judgment.’’ இதிலிருந்து தெளிவாவது உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பில் விவாதிக்கப்படும் விஷயம் தற்காலிக ஊழியர்களின் நிரந்தரம் தொடர்பானதாகும்.
ஐடி துறையில் சாதனை
இங்கே ஐடி துறையிலும் கட்டமைப்பு வசதி களுக்கான திட்டங்களிலும் குறுகிய கால வேலைக்காக ஆலோசகர்களால் பணியமர்த்தப் பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற பிரச்சனையும் இல்லை. இதில் கல்வித்தகுதி பற்றியோ, ஏதேனும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அவர்களின் சேவையை நிறுத்தவும், தேவை ஏற்பட்டால் குற்ற நட வடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசு தயக்கம் காட்டியதும் இல்லை. இதனிடையே ஐடி துறையில் 52.44 லட்சம் சதுர அடியில் தொழிற்கூடம் அமைக்க அரசால் சாத்தியமாகி உள்ளது. அதோடு 35.5 லட்சம் சதுர அடியில் தொழிற்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை இந்த துறையில் எடுத்துக்கூற வேண்டிய சாதனைகளாகும்.

 பி.எஸ்.சி தரவரிசை பட்டியல்களின் நீட்டிப்பைக் குறிப்பிட்டுள்ளீர்கள். காலியி டங்களை அறிவிப்பதில் அலட்சியத்தாலும் தோல்வியினாலும் தரவரிசை பட்டியல்கள் காலாவதியானதை தொடர்ந்து, முந்தைய யுடிஎப் அரசு தரவரிசை பட்டியல்களின் காலவதியை 11 முறை நீட்டித்ததாக சட்டமன்ற பதிவுகள் காட்டு கின்றன. இந்த அரசின் கொள்கையே காலியி டங்களைத் துல்லியமாக அறிவிக்க வேண்டும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பட்டியல்களில் இருந்து நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பதாகும். ஒரு பட்டியலின் காலவதி நீட்டிக் கப்படும்போது, வயது வரம்பின் கீழ் ஆயிரக் கணக்கானோர் பி.எஸ்.சி தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்ற உண்மையை ஏன் மறைக்க வேண்டும்?

முதலீட்டு நட்பு மாநிலமாக கேரளம்
படித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அரசு சேவையில் காலியிடங்களில் பி.எஸ்.சி மூலம் நியமனம் உறுதி செய்யப்படுகிறது. அதோடு கேர ளாவை முதலீட்டு நட்பு மாநிலமாக மாற்றுவதோடு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் இந்த அரசின் நோக்கம் ஆகும். இருப்பினும், குறுகிய நலன்களின் பெயரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படும்போது, மாநிலத்திற்கு வர ஆர்வமுள்ள பல முதலீட்டாளர்கள் பின் வாங்குவார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. விவாதங்களில் உண்மைகளை புறக்க ணித்தால் கேரளத்தின் புதிய வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றம் பின்னடைவை சந்திக்கும். தோல்விகளை சுட்டிக்காட்டுவதும் விமரிசிப்பதும் ஆக்கபூர்வமாக இருப்பதுடன் மேலே சுட்டிக்காட்டிய உண்மைகளை மனதில் கொள்ளுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.