tamilnadu

img

பிரச்சனையை பரிசீலிக்க வேண்டியது ஏசியாநெட்; புத்திசாலிகளாக வேண்டியது நெறியாளர்கள் அல்ல! பங்கேற்பாளர்கள் பேச வாய்ப்பளிக்க வேண்டும்: சசிகுமார்

திருவனந்தபுரம், ஜூலை 27- தொலைக்காட்சி விவாதங்க ளில் புத்திசாலிகளாக வேண்டியது நெறியாளர்கள் அல்ல பங்கேற்பா ளர்கள் பேச போதிய வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் கூறுவதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்ட லாம். தொகுப்பாளரின் ஆதிக்கம் ஒரு நல்ல போக்கு அல்ல, என்று ஏசியாநெட் நிறுவனரும் மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் கூறினார். ‘பி கியூ’ ஆன்லைன் சானலுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: பல ஆங்கில தொலைக்காட்சிகளில் நெறியாளர் புத்திசாலிகளாக முயற்சிப்பதும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்படுவதையும் காண லாம். உண்மையின் தேடல் அல்ல அதன் நோக்கம்.

இன்று அந்த நபரை ஒன்று மில்லாமல் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடத்தும் நிகழ்ச்சியாகும் அது. நாம் அதை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டும். இங்குள்ள நெறியாளர் அர்ணாப் கோஸ்வாமியைப் பார்த்து கற்றுக் கொள்கி றார்கள் என கருத வேண்டும். அத்தகைய அணுகுமுறை மூலம் டிஆர்பியை அதி கரிக்கவும் அதிக விளம்பரம் பெறவும் முடியும். ஆனால், மக்களுக்கு தேவையா னதை வீசி எறிவது என்பதல்ல பொறுப்பான ஊடகவியல். அது மயக்க மருந்து விற்போ ரின் திட்டமாகும். மக்களுக்கு இப்போது மயக்க மருந்து தான் தேவை எனக் கருதி மயக்க மருந்து விற்பதே அவர்களது சிந்தனை. ஒருபோதும் அந்த முறை ஊடகவியலில் மேற்கொள்ளக் கூடாது.

சபாநாயகரை அவமதித்தது தவறு
கேரள சபாநாயகரை ஏசியாநெட் அவ மதித்தது சரியல்ல. மதிப்பு மிக்க பதவி அது. ஜனநாயகத்தில் அவரது அலுவல கத்தையும் நாம் மதிக்க வேண்டும். ஏசியாநெட்டை புறக்கணிக்கும் நிலைக்கு சிபிஎம்மை இட்டுச் சென்ற நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து விசாரிக்க வேண்டும். அத்தகைய ஒரு ஆய்வு நடக்கும் என்று தான் கருதுகிறேன். நான் சானல் தலைவனாக இருந்து இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் எனது இயலாமையாகவே கருத வேண்டும். நான் தலைமை வகிக்கும் நிறுவனத்தின் போதாமையாகவே மதிப்பீடு செய்ய வேண்டும். புறக்கணிப்பு என்பது ஜனநாயக முறையல்ல என்று சிலர் கூறுவதாக படித் தேன். நான் அதில் பங்கேற்க மாட்டேன். அந்த சானலை பார்க்க மாட்டேன் என்று கூறினால், நான் எப்படி ஜனநாயக விரோதி ஆவேன். அவ்வாறு கூறுவதென்பது அவரவர் உரிமை யாகும். விவாதத்தில் வேண்டுமென்றே அவர்களை மோசமாக சித்தரிப்பதாக சிபிஎம்- க்கு தோன்றுகிறது. விவாதத்தில் ஒரு வரை பங்கேற்கச் செய்திருந்தால் அவர் பங்கேற்றதாகவே கொள்ளப்படும். ஆனால்,  பங்கேற்ற நபர் கூற வேண்டியதை கூற முடி யாது. அத்தகைய முரண்பாடு உள்ளது.

ஏசியாநெட்டுக்கே பொறுப்பு
பிரதான ஊடகமான தங்களை ஒரு அர சியல் கட்சி புறக்கணிக்கும் போது, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஏசியானெட் நிச்சயமாக முன்முயற்சி எடுக்க வேண்டும். நமது தரப்பில் தவறு நடந்துள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும். அந்த வகையில் அவ சரமான தலையீடு தேவை. நாம் செய்வது சரி தானா, சிபிஎம்மை மோசமாக சித்தரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா என்பதை யெல்லாம் விரிவாக பரிசீலிக்க வேண்டும் என சசிகுமார் அந்த பேட்டியின் போது கேட்டுக் கொண்டார்.