கொச்சி, மார்ச் 3- கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தோப்பும்படி அரூஜா பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 3 தேர்வுகளை மாணவர்கள் எழுத உள்ளனர். அரூஜா பள்ளிக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி சிபிஎஸ்சி அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை மாணவர்களுக்கு தெரிவிக்காத நிலையில் கடந்த வாரம் துவங்கியது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மாணவர்கள் சென்றபோது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு எதிராக 28 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. செவ்வாயன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாநிலத் தேர்வை எழுத மாணவர்களை அனுமதிக்க முடி யுமா என கேள்வி எழுப்பியது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் எழுத வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டதாக கூறி மாண வர்கள் தேர்வு எழுத அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 3 தேர்வுகளை மட்டுமே மாணவர்கள் எழுத முடியும். இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எங்கள் பிள்ளைகளின் ஓராண்டு காலபடிப்பு வீணாகி விட்டதே என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.