கோவிட் நோயாளிகளில் 70 சதவிகிதம் பேர் வெளியில் இருந்து வந்தவர்கள்
திருவனந்தபுரம், மே 13- கேரளத்திற்கு வெளிநாடுகள், வெளி மாநி லங்களில் இருந்து ஏராளமானோர் வந்துகொண்டி ருக்கிறார்கள். வருகிறவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பதுடன், சமூக பரவல் என்கிற அச்சுறுத்தலை தடுப்பதே இனி யுள்ள சவாலான பணி. கேரளத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவிகிதத்தி னர் வெளியிலிருந்து வந்தவர்கள், மீதமுள்ள வர்கள் அவர்களது தொடர்பால் பாதிக்கப்பட்ட வர்கள் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
செவ்வாயன்று நடந்த கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தற்போதுள்ள 32 நோயாளிகளில் 23 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது கேரளத்திற்கு வெளி யிலிருந்தாகும். 9 பேருக்கு தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்புகள் மூலம் நோய் பரவல் எதிர்பார்த்ததுதான். காசர்கோடில் ஒருவரி டமிருந்து 22 பேருக்கு ஒரேயடியாக நோய் பரவியது.
சாலை வழியாக 33,000 பேர்
இதுவரை இதர மாநிலங்களிலிருந்து சாலை வழியாக 33,000 பேர் வந்துள்ளனர். இதில் 19,000 பேர் சிவப்பு மண்டலமாக உள்ள மாவட்டங்க ளில் இருந்து வந்தவர்களாவர். சிவப்பு மண்ட லங்களில் இருந்து 72,800 பேர் உட்பட பயண அனுமதி கேட்டு 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்த னர். 89,950 பேருக்கு இதுவரை அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதில் 45,157 பேர் சிவப்பு மண்டலங்க ளைச் சேர்ந்தவர்கள். கட்டுப்பாடுகள் தோல்வி அடைந்தால் நிலைமை கைமீறிச் சென்றுவிடும். அது கடுமையானதாகிவிடும் என்பதை உணர வேண்டும். இதுவரை நோய் பரவலை விரைவாக கண்டறியவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடு களை செய்துகொள்ளவும் முடிந்தது. மாநி லத்திற்கு வரவிருப்பவர்களுக்கும் அது சாத்திய மாக வேண்டும்.
இனி வரும் நாட்களில் நிலைமைகளில் மாற் றங்களை எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளிலும், இதர மாநிலங்களிலும் நோய் பரவல் வலுவ டைந்து வருகிறது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை ஏற்க வேண்டியிருக்கிறது. அவர்கள் அனைவரும் கேரளத்திற்கு வர வேண்டிய வர்களும் பாதுகாக்கப்பட வேண்டியர்களுமா வர். இதுவரை கிடைத்தது போன்ற உதவி களும், ஒத்துழைப்பும் தேவை. எனவே, கட்டுப் பாடுகளை கவனமாக தொடர வேண்டும். ஒவ் வொருவரது பாதுகாப்பும் நாட்டின் பாதுகாப்பு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண் டும் என முதல்வர் கூறினார். ’
ஜுன் 1 முதல் ஆன்லைன் வகுப்பு
கேரளத்தில் ஜுன் ஒன்றாம் தேதி முதல் ஆன் லைன் வகுப்புகள் துவங்க உள்ளது. சாதாரண கல்வி செயல்பாடுகள் பின்னர் தீர்மானிக்கப்படும். உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார். பாலிடெக்னிக் படிப்பை முடித்தவர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சிறப்புத் தேர்வு நடத்தப்படாது. மாறாக மதிப்பெண் அடிப் படையில் சிறப்பு அனுமதி அளிக்கப்படும். மாநி லத்தில் உள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வீடுகளின் அருகில் உள்ள பாலிடெக்னிக்கில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். பேரிடர் நிவாரண நிதிக்கு குழந்தைகள் பெரிய அளவில் ஆர்வத்துடன் உதவுகிறார்கள். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் கூறினார்.
தொற்று 5 பேருக்கு
கேரளத்தில் செவ்வாயன்று மலப்புறம் 3, பத்தனம்திட்டா, கோட்டயம் தலா ஒன்று என 5 பேருக்கு கோவிட் கண்டறியப்பட்டது. இதில் நால்வர் வெளிநாடுகளில் இருந்தும் ஒருவர் சென்னையில் இருந்தும் வந்தவர்கள். செவ்வா யன்று யாரும் நோயிலிருந்து குணமடைய வில்லை. இதுவரை 524 பேருக்கு நோய் கண்டறி யப்பட்டது. கண்காணிப்பில் 31,616 பேர் உள்ள னர். செவ்வாயன்று 95 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 38,547 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது 34 ஹாட்ஸ்பாட்டுகள் உள்ளன. திருவனந்தபுரம், இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் கோவிட் நோயாளிகள் இல்லை என முதல்வர் தெரி வித்தார்.
தனி அறையில்
கேரளத்தில் கோவிட் பரவல் புதிய கட்டத்தில் உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரு வோர் வீட்டுத் தனிமை கண்காணிப்பில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நடைமுறையில் அது தனியறை கண்காணிப்பாக மாற வேண் டும். மற்றவர்களுடன் நேரடியாக பழகாமல் இருக்க வேண்டும். அரசும், சுகாதார ஊழி யர்களும் கூறுவதை கடைப்பிடிக்க வேண்டும். இதில் சமரசம் கூடாது. கடந்த முறை போலவே கவனமாக செயல்பட வேண்டும். வீட்டு கண்கா ணிப்பை மீறுவோர் நிறுவன கண்காணிப்புக்கு மாற்றப்படுவார்கள் எனவும் முதல்வர் கூறினார்.