tamilnadu

img

குர்ஆனை விவாதத்துக்கு உள்ளாக்கியது ஆர்எஸ்எஸ்... பின்தொடர்ந்தது காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள்....

திருவனந்தபுரம்:
குர்ஆனை விவாதக்குள்ளாக்கியது ஆர்.எஸ்.எஸ் என்றால் அதை பின்தொடர்ந்தது காங்கிரஸ், லீக் தலைவர்கள். குர்ஆன் ஏன் விவாதத்துக்கு இட்டுச் செல்லப்பட்டது என்று முஸ்லீம் லீகும் காங்கிரஸும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து சனியன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது: ‘குர்ஆனின் திரைமறைவில் தங்கம் கடத்தல்’ என ஒரு விவாதத்தை உருவாக்க முயன்றது பாஜக-ஆர்எஸ்எஸ் சங்பரிவார் முயன்றன. அதில் அவர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் உள்ளது. ஆனால் அதைப் பின்தொடர்ந்து, யுடிஎப் கன்வீனர் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமரிடம் புகார் அளிக்க முன்வந்தனர். அதன்பிறகு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர்கள் பின்னர் குர்ஆன் என்ற போர்வையில் தங்கத்தை கடத்தியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினர் என்று முதல்வர் கூறினார்.

ஜலீலைப் பாதுகாக்க குர்ஆனை அரசாங்கம் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர், கடத்தல் மூலம் குர்ஆனை முதன்முதலில் கற்பிக்கும் அரசாங்கம் என்று லீக் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டது? இது யாருக்காக கூறப்பட்டது? எதற்காக அவர்கள் ஏன் குர்ஆனை விவாதத்துக்கு கொண்டு வந்தார்கள்? ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டுவதற்கான அவர்களின் சொந்த நோக்கம் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். காங்கிரஸ், லீக்கின் தலைவர்கள் அதை எடுத்து ஒரு பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.இப்போது அந்த பிரச்சாரம் அவர்களைத் திருப்பித்தாக்கும் எனத் தெரிந்ததும் உருண்டு புரள்கிறார்கள். நடந்த தவறை அடையாளம் காண்பது பெரிய விசயம். குர்ஆனை ஒரு சர்ச்சைக்குரியதாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அரசையும் அமைச்சரையும் தாக்க குர்ஆன் பயன்படுத்தியிருக்க வேண்டாம் என்றும் முதல்வர் கூறினார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர், குஞ்ஞாலிக்குட்டிக்கு இப்போது சரியான விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தால் அது ஒரு நல்ல விசயம். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் ஸக்காத்தாக வழங்கும் உணவுப் பொருட்களுடன் குர்ஆனையும் விநியோகிக்க முடியுமா என்று தூதரக ஜெனரல் ஜலீலிடம் கேட்கிறார். ஜலீலும் உதவினார். அதையே குர்ஆன் என்கிற போர்வையில் தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டுகிறார்கள் என்று முதல்வர் கூறினார்.

;