திருவனந்தபுரம்:
கோவிட்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கால் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவுப்பொட்டலத்துடன் நூறு ரூபாய் நோட்டை உட்பொதியாக வைத்த பெண்மணிக்கு நினைவுப் பரிசுடன் ஒரு லட்சம் ரூபாய் அளித்து பாராட்டியுள்ளது ஒரு ஐடி நிறுவனம்.
கேரளத்தில் கொச்சி கும்பளங்ஙியைச் சேர்ந்தவர் மேரி செபாஸ்டின். கோவிட்ஊரடங்கில் சிக்கி உணவின்றிதவித்தோருக்கு தன்னார்வ ஊழியர்கள் உணவு சேகரித்து வழங்கினர். அதில்ஒரு பொட்டலத்தை காவல்துறையினர் பிரித்தபோது பிளாஸ்டிக் காகிதத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் தாளை பார்த்து ஆச்சரியமடைந்தனர். காவல் உதவி ஆய்வாளர் அதை படம் பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அது கேரளத்தில் வைரலானது.அந்த பொட்டலத்தை வழங்கியவர் மேரி செபாஸ்டின் என்பதை அறிந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. காவல்துறையினரும் பரிசளித்து சால்வை அணிவித்து பாராட்டினர். இந்நிலையில் பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎஸ் நிர்வன தலைவர் வி.கே.மாத்தியூஸ் மேரியின் வீட்டுக்கு நேரில் சென்று நினைவுப் பரிசுடன் ஒருலட்சம் ரூபாய் அளித்துள்ளார். மேரி செபாஸ்டின் தன்னலமற்ற சேவையை செய்துள்ளார் என அவர் பாராட்டியுள்ளார்.