திருவனந்தபுரம், ஜுன் 22- கேரளத்தில் ஞாயிறன்று 133 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்ப ட்டது. இதில் 80பேர் வெளி நாடுகளில் இருந்தும் 43பேர் இதர மாநிலங்களில் இரு ந்தும் கேரளத்துக்கு வந்த வர்கள். தொடர்புகள் மூலம் 9 பேருக்கும் சுகாதார ஊழியர் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை ஞாயிறன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு ள்ளதா வது: சிகிச்சை பெற்று வந்த வர்களில் 93 பேர் ஞாயிறன்று குணமடைந்தனர். தற்போது 1490 பேர் சிகிச்சையில் உள்ள னர். இதுவரை சிகிச்சையில் இருந்தவர்களில் 1,659 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவ ட்டங்களில் 1,43,969 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,41,919 பேர் வீடுகள்-நிறுவன கண்கா ணிப்பிலும் 2050 பேர் மருத்து வமனை கண்காணிப்பிலும் உள்ளனர்.
ஞாயிறன்று 325 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஞாயி றன்று மேலும் 7 தீவிர நோய் பரவல் பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டன. 9 பகுதிகள் தீவிர நோய் பர வல் பட்டியலில் இருந்து வில க்கப்பட்டன. தற்போது கேர ளம் முழுவதுமாக 109 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன. ஞாயிறன்று காலை வரை 24 மணி நேரத்தில் 5239 மாதி ரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை 1,37,475 நபர்க ளின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 3460 மாதிரிகளின் முடிவுகள் நிலு வையில் உள்ளன. மேலும், சமூக தொடர்பு அதிகம் உள்ள சுகாதார ஊழியர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னு ரிமை பிரிவினரின் 38,146 மாதிரிகள் ஆய்வு செய்யப்ப ட்டன. அதில் 36,751 மாதி ரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியாகின. மறுமுறை ஆய்வு உட்பட மொத்தம் 1,83, 201 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.