திருவனந்தபுரம்: கேரளத்தில் கிப்பி உதவி யில் அரசுப்பள்ளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரத்தில் உள்ள பட்டம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிப்பி நிதி யை பயன்படுத்தி புதிய கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறை கள், 5 ஆய்வகங்கள், அகன்ற கலையரங்கம் போன்றவற்றைக் கொண்டது இந்த கட்டிடம். புதிய கட்டிடத்தின் ஆய்வக வசதிகளை விரிவு படுத்த சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பிரசாந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்து தளவாடங்கள் வாங்க அனுமதி அளித்துள்ளார். கிப்பி மூலம் 6 பள்ளிகள் அடங்கிய கிளஸ்ட ரில் பணி நிறைவடைந்தவற்றில் கடைசி கட்டிடம் பட்டம் மேல்நிலைப்பள்ளி ஆகும். மாநகராட்சி யின் ஆண்டு திட்டத்திலிருந்து ரூ.20 லட்சம் பள்ளி யை நவீனப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டி டத்தை திங்களன்று பள்ளி நிர்வாகத்திடம் ஒப்ப டைத்ததாக வி.கே.பிரசாந்த் எம்எல்ஏ கூறினார். நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் உதவியு டன் மாணவிகளின் கலாச்சார மேம்பாட்டிற்கும் தகவல் தொழில்நுட்பக் கற்றலுக்கும் நவீன ஸ்டுடி யோ அமைப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.