tamilnadu

img

71வது குடியரசு தினத்தன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இடதுசாரிக் கட்சிகள் உறுதியேற்பு நிகழ்ச்சிகள்

நாட்டின் 71வது குடியரசு தினத்தன்று, மகத்தான அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இடதுசாரிக் கட்சிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பிலும் உறுதியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி அழைப்பின்பேரில் நடைபெற்ற பிரம்மாண்டமான மனிதச்சங்கிலியில் 70லட்சம் பேர் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன், அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றார். (வலது) தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதியேற்பு இயக்கம் நடைபெற்றது. சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகில் அரசிலமைப்புச் சட்ட முன்னுரையை வாசித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் உறுதியேற்றனர்(செய்தி : 3)

;