திருவனந்தபுரம், ஆக.10- கேரள அரசின் மக்கள் நல வளர்ச்சி நடவடிக்கைகளை தகர்க்க யுடிஎப்பும், பாஜகவும் கைகோர்ப்பதாகவும், தற்போ தைய விவாதங்கள் அதன் பகுதி என்பதை தெளிவுபடுத்துகிறது. கேரளத்தின் வளர்ச்சிக்கு வழி வகுப்பவர்கள் இடதுசாரிகள். ஆனால், யுடிஎப்பும் பாஜகவும் வழிமூடுகின்றன. இது மக்களி டம் அம்பலப்படுத்தப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு கூட்டம் ஞாயிறன்று இணை யம் வழியாக நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகளை விளக்கி அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: விவா தங்களின் பெயரால் கேர ளத்தின் வளர்ச்சிப் பணிகளை கைவிடக் கூடாது என கேரள அரசை கொடியேரி கேட்டுக் கொண்டார். விவாதங்கள் வள ர்ச்சிப் பணிகளை எந்த வகை யிலும் பாதிக்கக் கூடாது. அறி வித்த அனைத்து திட்டங்களை யும் நிறைவேற்ற வேண்டும். எல்லாவற்றையும் வெளிப் படையாகவே அரசு செய்து வரு கிறது.
யுடிஎப்பும், பாஜகவும், எல்டிஎப் அரசு தோல்வி என நிறுவ கைகோர்த்துள்ளன. அதன் மூலம் அரசை நிச்சய மற்றதாக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர். இது வேண்டுமென்றே செய்வதா கும். அடுத்த முறை யுடிஎப்பை ஆட்சியில் அமர்த்தி, தங்க ளது சொந்தங்களை பயன் படுத்தி எதிர்காலத்தில் கேர ளத்தில் அதிகாரத்தை கைப் பற்ற வேண்டும் என்பது பாஜக வின் மோகம். வடஇந்திய மாதிரியில் வகுப்புவாதமும், அச்சுறுத்தி யும் அடிபணிய வைத்தலும் இங்கு செல்லுபடி ஆகாது என்பது பாஜகவுக்கு தெரியும். கர் நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாதிரியில் அரசை வீழ்த்துவதும் இங்கு நடக்காது. அதற்கு காங்கிரசே சிறந்தது என்பதும் அவர்களுக்கு தெரி யும். ‘தற்போது காங்கிரசை ஆத ரிப்பது. பின்னர் அதில் ஆர்எஸ்எஸ் நிலைபாடு கொண்டவர்களை பிடித்து ஆட்சியை பிடிப்பது’ என்கிற நீண்டகால திட்டத்தை யே கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமல்படுத்துகிறது. அதற்காக எல்லா வகையிலும் கைகோர்ப் பதாகவும் அவர் கூறினார்.
நிலைப்பாடுகள் மீதே விமர்சனம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பாஜகவை ஆதரிக்கும் ரமேஷ் சென்னி தலாவின் அரசியல் நிலைப் பாடுகளையே விமர்சிப்பதாக கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். அவரது பாதுகாப்பு அதிகாரி ஆர்எஸ்எஸ் சாரீரிக் பிரமுக்காக மாவட்ட அளவில் செயல்பட்டவராவார். காங்கி ரஸ்காரர்களாக உள்ள போலீஸ் கிடைக்காததால் அல்லவே அவர் ஆர்எஸ்எஸ் தலை வரை தேடிப்பிடித்து கன் மேனாக நியமித்தது. அவரது ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப் பாடு ஏற்கனவே உள்ளது தான். இப்போது தீவிரமாக்கப்பட் டுள்ளது. அதன் பின்னணியில் சில லட்சியங்ள் உள்ளன. மற்ற கட்சிகளில் உள்ள பல ரும் வேறு கட்சியில் இணைவ துண்டு. அவர்கள் இருக்கும் கட்சியின் நிலைப்பாட்டையே மேற்கொள்வார்கள். ஆனால் ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்றொரு கட்சியின் நிலை பாட்டை தூக்கிப்பிடிக்க கூடாது. பாஜக, ஆர்எஸ்எஸ் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் தான் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.
அரசு வேலைவாய்ப்புகள்
எல்டிஎப் ஆட்சிக்கு வந்த பிறகு பிஎஸ்சி மூலம் நடந்த நியமனங்கள் இதுவரை இல் லாத சாதனையாகும். ஆனால், தகுதி (ராங்க்) பட்டியலில் உள்ள அனைவருக்கும் நிய மனம் கிடைக்காது. அத்தகைய நபர்களுக்கு அதிருப்தி ஏற் படுவது இயல்பு. தற்போதுள்ள சட்டம் மற்றும் அதை செயல் படுத்துவதில் உள்ள பிரச்சனை யாகும் இது. அவற்றில் என்ன மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அரசும் பிஎஸ்சியும் விவா தித்து முடிவெடுக்க வேண்டும். தகுதிப் பட்டியலின் காலாவதி நீட்டிக்க கூடாது என்கிற நீதி மன்ற தீர்ப்புகள் அமலில் உள்ள தாகவும் அவர் கூறினார். தொலைக்காட்சி விவா தங்களில் பங்கேற்க வேண்டாம் என ஒரு அமைச்சருக்கும் உத் தரவில்லை. ஆனால், ஒரு தொலைக்காட்சியின் (ஏசியா நெட்) விவாதத்தில் கட்சி பிரதி நிதிகள் பங்கேற்க மாட்டார்கள். அது எதனால் என்பதை அந்த சானல் தீர்மானிக்கட்டும். நிலைப்பாடை தொடர்வதாக சானல் தலைவரே கூறிவிட் டால். பாஜக எம்பி தான் அந்த சானலின் தலைவர். அவர்கள் அந்த நிலைப்பாட்டை தொட ரட்டும். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதற்கு உதவ வேண்டாம் என்று தீர்மா னிக்கும் சுதந்திரம் எங்களுக் கும் உண்டு என்று கொடியேரி கூறினார்.