திருவனந்தபுரம், அக்.24- திருவனந்தபுரம் மேயர் வி.கே.பிரசாந்த் வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 14,251 ஓட்டுகளில் வெற்றி பெற்றார். இதுபோல் சபரிமலையை உள்ளடக்கிய கோந்நி தொகுதியில் எல்டிஎப் வேட்பாளர் ஜினேஷ் குமார் 9,953 ஓட்டுகளில் வெற்றி பெற்றார். யுடிஎப்பிடமிருந்து இந்த இரண்டு தொகுதிகளையும் எல்டிஎப் கைப்பற்றியுள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலிலும் 2019இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வட்டியூர்காவு தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் மூன்றாம் இடத்தையே பெற முடிந்தது. தற்போது யுடிஎப், பாஜகவுக்கு மிகுந்த செல்வாக்குமிக்க பகுதிகளாக கருதப்பட்டுவந்த இடங்களில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வி.கே.பிரசாந்த் வெற்றி பெற்றுள்ளார். தபால் ஓட்டுகள் எண்ணத் தொடங்கியது முதல் அனைத்து சுற்றுகளிலும் இவருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைத்தன. இறுதியாக வி.கே.பிரசாந்த் பெற்ற மொத்த ஓட்டுகள் 54,830 (44.25 சதவிகிதம்). யுடிஎப் வேட்பாளர் கே.மோகன்குமார் 40,365 (32.58), ஓட்டுகளும், பாஜகவின் எஸ்.சுரேஷ் 27,453 (22.16) ஓட்டுகளும் பெற்றனர்.
கோந்நி – ஜினேஷ் குமார்
கடந்த 23 ஆண்டுகளாக யுடிஎப் வெற்றிபெற்று வந்த தொகுதி கோந்நி. இந்த தொகுதியில்தான் சபரிமலை உள்ளது. சபரிமலையின் பெயரால் காங்கிரசும் பாஜகவும் ஓட்டு வேட்டை யாடும் முயற்சியில் தொடர்ந்து ஈடு பட்டு வந்தன. ஆனால் சபரிமலையின் வளர்ச்சிக்காக எல்டிஎப் அரசு மேற்கொண்டு வரும் பணிகளை கண் முன்னால் கோந்நி வாக்காளர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த தொகுதியின் எல்டிஎப் வேட்பாளராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணை தலைவரான கே.வி.ஜினேஷ் குமார் போட்டியிட்டார். வெற்றி பெற்ற அவ ருக்கு கிடைத்த வாக்குகள் 54,099 (38.96 சதவிகிதம்). யுடிஎப் வேட்பாளர் மோகன்ராஜ் 44,146 (31.79) ஓட்டுகளும், பாஜகவின் கே.சுரேந்திரன் 39,786 (28.65) ஓட்டுகளும் பெற்றார்.