tamilnadu

img

கோவிட் தடுப்பில் கேரளம் முன்மாதிரி: பிடிஜேஎஸ் தலைவர் பேட்டி

சேர்த்தலா, ஜுன் 20- கோவிட்டிலிருந்து மக்களை பாது காப்பதில் கேரளம் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது என பாஜக கூட்ட ணியில் உள்ள பிடிஜேஎஸ் கட்சித் தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி தெரிவித்தார். பிடிஜேஎஸ் மாநில கவுன்சில் கூட்டத் துக்கு பிறகு சனியன்று செய்தியாளர்க ளை துஷார் வெள்ளாப்பள்ளி சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: கோவிட்டை எதிர்கொள்வதில் அர சியலை ஒதுக்கி வைத்துவிட்டு அனை வரும் அணிவகுத்துள்ளனர். மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல் படுகின்றன. கேரளத்தின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளன. கேரளத்தின் கல்வி வளர்ச்சி இப்பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக் கிறது என துஷார் தெரிவித்தார். உள்ளாட்சிமன்ற தேர்தலில் 35 முதல் 40 சதவிகிதம் இடங்களில் பிடிஜேஎஸ் போட்டியிடும். வேட்பாளர்கள் இந்த மாதம் தேர்வு செய்யப்படுவார்கள். ஜுன் 28ஆம் தேதி கூடும் என்டிஏ கூட்டத்திற்கு பிறகு இறுதி பட்டியில் தயாராகும். ஊழல் வழக்கில் குற்றவாளியான சுபாஷ் வாசுவை ஸ்பைசஸ் போர்டு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குமாறு பாஜக மத்திய தலைமைக்கும், அமைச்சர்க ளுக்கும் கடிதம் அளித்துள்ளதாகவும் துஷார் கூறினார்.