tamilnadu

கேரள உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயார் ஒரே கட்டத்தில் திருத்தம்

 திருவனந்தபுரம், மே 13- கேரள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. ஊரடங்கு திரும்ப பெறப்பட்ட ஒரு வாரத் துக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படும் என மாநில தேர்தல் ஆணை யர் வி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தேசாபிமானி நாளி தழுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறி யதாவது:  கோவிட் சூழ்நிலையில் பொருத்த மான நேரத்தில் ஒரே கட்டமாக உரிய கால அவகாசம் அளித்து வாக்காளர் பட்டி யலை இறுதிப்படுத்தலாம் என ஆணை யம் கருதுகிறது. வாக்குப்பதிவு அலுவ லர்கள் பட்டியலை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. சுமார் 1300 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கிராம- ஒன்றிய- மாவட்ட பஞ்சா யத்துகளுக்கு ஒவ்வொரு அதிகாரி நிய மிக்கப்படுவர். 25 வார்டுகள் வரை உள்ள நகராட்சிகளில் ஒரு அதிகாரியும் அதை விட அதிக வார்டுகள் உள்ள நகராட்சி களில் இரண்டு அதிகாரிகளும் நிய மிக்கப்படுவார்கள். மாநகராட்சிகளில் 55 வார்டுகள் வரை இருவர், 75 வரை மூவர், அதைவிட கூடுதல் வார்டுகள் இருந்தால் நால்வர் அதிகாரிகளாக நியமிக்கப்படு வர். உதவி வாக்குப்பதிவு அலுவலரும் தேவைப்படுவார்கள். தற்போது வார்டுகளை அடிப்படை யாகக் கொண்டு தேர்தல் நடத்தப்படு கிறது. நவம்பர் 11இல் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைகிறது. தேர்தல் செல வுக்காக ரூ.180 கோடியை மாநில அரசி டம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது என வி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.