கேரளாவில் உள்ள 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வத்தியூர் காவு தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.கே.பிராசாத் 14251வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கும் கோந்தி தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜெனிஸ் குமார் 10039வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் 3 தொகுதிகளில் தொடர்ந்து இழுபறி நடைபெற்று வருகிறது.