tamilnadu

img

ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீடு

திருவனந்தபுரம்:
ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டமான லைப் மூலம் 1,50,530 வீடுகள் கட்டி தேசத்தின் முன்மாதிரியாக ஏழைகளுக்கு வழங்கி மற்றொரு சாதனையை கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு படைத்துள்ளது. திட்டத்தின் இரண்டு பகுதிகளைக் கடந்து மூன்றாவது பகுதி வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் பகுதியில் பாதியில் நின்ற 51,887 வீடுகளின் கட்டுமானப்பணிகள் முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இரண்டாம் பகுதியில் நிலம் உள்ள வீடற்றவர்களுக்கு 98,643 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டன. இரண்டு முறை கேரளம் எதிர்கொண்ட பெருவெள்ள துயரத்திலிருந்து மீண்ட உள்ளாட்சி அமைப்புகள் லைப் தி்ட்டத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டன. ஜனவரி 26க்கு முன்னதாக இரண்டு லட்சம் வீடுகளின் பணிகளை முடிக்க வேண்டும் என்பது இலக்கு.  
பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் நின்ற வீடுகளின் எண்ணிக்கை 54,186. இதில் மீதமுள்ள 2,299 வீடுகள் சொத்து தகராறு, பயனாளியின் உயிரிழப்பு போன்ற காரணங்களால் முழுமை பெறாமல் உள்ளன. சொந்த நிலம் உள்ள பயனாளிகள் 2,29,921 பேர். இதில் 1,83,293 பேர் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.ஹட்கோவின் கடன் உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமத்தைக் கடந்து குறுகிய காலத்தில் இரண்டாவது பகுதியின் 98,643 வீடுகளின் கட்டுமானப்பணி நிறைவடைந்தது. மீதமுள்ள 84,650 வீடுகளின் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதில் அரை லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மேல்பூச்சு போன்ற பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. நிலமும் வீடும் இல்லாதவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் சுமார் 80 அடுக்கக குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கான நிலங்களை மாவட்ட ஆட்சியர்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலான இடங்கிளில் திட்ட வரைபடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ப்ரீபேப் தொழில்நுட்ப அடிப்படையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.