tamilnadu

கேரளத்தின் அதிவேக ரயில்பாதை: நிலத்துக்கு 4 மடங்கு வரை இழப்பீடு

திருவனந்தபுரம், ஜூலை 26- திருவனந்தபுரம்- காசர்கோடு அதிவேக ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து கவலைப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் கேரள ரயில்வே மேம்பாட்டுக் கழகம் கூறியுள்ளது.  குறைந்தபட்ச நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் இழப்பீட்டுத் தொகை நிலத்தின் சந்தை மதிப்பை விட இரண்டு முதல் நான்கு மடங்கு இருக்கும் என்றும் கே-ரெயில் எம்.டி வி அஜித் குமார் கூறினார். முடிந்த வரை மக்கள் வசிக்கும் பகுதிகளை தவிர்க்கவும். வீடுகள், பிற கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கும் இரட்டிப்பு இழப்பீடு கிடைக்கும். தற்போதுள்ள திருவனந்தபுரம்- மங்களூர் ரயில் பாதைக்கு அருகே அதே சீரமைப்பில் புதிய அதிவேக ரயில்பாதை அமைக்கப்பட்டால், தற்போதுள்ள பாதையின் சிக்கல்களும் புதிய பாதையிலும் எழும். திரு வனந்தபுரம் முதல் திரூர் வரை தற்போதுள்ள வளைந்து நெளிந்து செல்லும் பாதைக்கு சமமாக அதிவேக பாதை அமைக்கப்பட்டால் திட்டமிட்டுள்ள மணிக்கு 200 கிலோ மீட்டல் வேகம் சாத்தியமாகாது. இந்த சிக்கல் இல்லாத திரூர்- காசர்கோடு பிரிவு தற்போதுள்ள பாதைக்கு இணையாக உள்ளது. தற்போதுள்ள நிலையங்கள் பீடர் சேவைகள் மூலம் இணைக்கப்பட் டால், அனைவருக்கும் பயனளிக்கும் என்று அஜித் குமார் கூறினார்.

;