திருவனந்தபுரம், செப். 8- கேரளத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று ஐந்தே நாட்களில் ரூ.22 கோடியே 90 லட்சத்து 67 ஆயிரத்து 326 கேரள மக்கள் வாரி வழங்கியுள்ளனர். கேரளத்தில் தொடர்ந்து இரண்டாவதுஆண்டாக கடந்த ஆகஸ்ட்டில்பெருமழைபெய்தது. நிலச்சரிவில் 2 கிராமங்களே மண்ணில்புதை யுண்டன. நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுடன் ஏராளமானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் முதல்வரின் வெள்ள நிவா ரண நிதிக்கு தாராளமாக உதவி வரு கின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 13 முதல் 18 வரை 5 நாட்கள் நிதி வசூலுக்கு அறைகூவல் விடுத்தது. அதன்படி மக்கள் இந்த பெருந்தொகையை அளித்துள்ளனர்.