திருவனந்தபுரம், ஜூலை 6- கல்வித்துறையில் முதல் டிஜிட் டல் மாநிலமாக கேரளம் மாற உள்ள தாக கேரள கல்வித்துறை அமைச்சர் சி.ரவிச்சந்திரநாத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லாப்) நிறுவும் திட்டத்தின் மாநில அள விலான துவக்க விழா சனியன்று திரு வனந்தபுரத்தில் நடந்தது. விழா வுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது: மாநிலத்தில் உள்ள பொதுப்பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்) 8 முதல் 12 வரையிலான வகுப்புகள் ஹைடெக் ஆக்கப்பட்டன. 9941 தொடக்கப் பள்ளிகளும் ஹைடெக் ஆக மாறுகின்றன. 4 மாதங்களில் அதற்கான பணிகள் நிறைவடை யும். அதோடு கல்வித்துறையில் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளம் மாறும். தொடக்கப்பள்ளிகளில் ‘கிப்பி’ மூலம் ரூ.292 கோடி மதிப்பீட் டில் ஹைடெக் ஆய்வகங்கள் நிறு வப்படுகின்றன. 55,806 மடிக்கணினிகளும், யுஎஸ்பி ஒலிபெருக்கிகளும் 23, 179 புரொஜெக்டர்களும் பள்ளி களுக்கு வழங்கப்படும். இத்திட் டத்தின் பகுதியாக 82 ஆயிரம் ஆசி ரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 8191 பள்ளிகளில் பிராட்பாண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படிப்பதற்கான களிப்பெட்டியும் அதற்கான பாட புத்தகங்களும் மாண வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் கூறினார். பாடப்புத்தகங்களில் படிப்ப தோடு அவற்றை பார்க்கவும் கேட்க வும் வசதியாக கியு ஆர் குறியீடு களை பாடப்புத்தகங்களில் கேரள கல்வித்துறை பொறித்துள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் உதவியுடன் கியு ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறைகளில் உள்ள எல்சிடி புரொஜக்டர்களில் இணைத்தும் அந்த காட்சிகளை பார்க்க முடியும். இதன் மூலம் குழந்தைகள் எளிதில் பாடங்களை தெரிந்துகொள்ளலாம். மாண வர்களுக்கு கிடைக்கும் இந்த அனு பவம் என்றென்றும் அவர்களது மன தில் நிற்கும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை கியு ஆர் குறியீடு பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படவில்லை எனவும், நாட்டிலேயே கேரளத்தில் முதன் முறையாக இந்த குறியீடு பயன் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.