கோழிக்கோடு, ஆக.29- எல்.ஜே.டி மாநிலத் தலைவ ரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினரு மான எம்.வி.ஸ்ரேயம்ஸ்குமார், ஊடகங்கள் அரசை சுற்றி வளைத்து தாக்குவது சரியல்ல என்றார். கோழிக்கோடு பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: “செய்திகளை துல்லியமாக படிக்க வேண்டும். இந்த சொல் அனை வருக்கும் பொருந்தும். கேரளத்தில் காங்கிர சுக்கும் பாஜகவுக்கும் ஒரே குரல் தான். ஊடகங்கள் அவர்களுக்கு அதிக வாய்ப்பை அளிக்கின்றன. இந்த சூழலில், இடதுசாரி கள் ஊடகங்களை விமர்சிப்பது இயல்பா னது” என்று மாத்ருபூமியின் நிர்வாக இயக்குந ருமான ஸ்ரேயாம் குமார் கூறினார். எதிர்க்கட்சி வெறுமனே அர சாங்கத்திற்கு எதிராக குற்றச் சாட்டுகளை முன்வைத்து வரு கிறது. இதற்கெல்லாம் முதல மைச்சர் சட்டசபையில் தெளிவாக பதிலளித்துள்ளார். எல்டிஎப்க்கு தொடர் ஆட்சிக்கான வாய்ப்பு கிடைக்காமல் தடுக்கவே தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இது அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் நடவ டிக்கையின் ஒருபகுதியாகும். ஆனால் இவை எதுவும் எல்டிஎப்தொடர்ந்து ஆட்சி செய்வதற்கான வாய்ப்புகளை பாதிக்காது. இந்த கோவிட் காலத்தில் கூட, ஓணம் பண்டிகைக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. ஆட்சியின் பயனாளிகளான மக்கள் இதையே கருத்தில் கொள்வார்கள். “மக்க ளுக்கு விஷயங்கள் தெரியும்,” என்று ஸ்ரே யாம்ஸ் காலிகட் பிரஸ் கிளப்பில் கூறினார்.