திருவனந்தபுரம், ஆக.20- கோவிட்-19 நோய் தொற்று பரவல் அதிக ரித்து வரும் சூழ்நிலையில் மாவட்ட உயர் அதிகாரிக ளிடம் கேரள முதல்வர் பின ராயி விஜயன் காணொலி மூலம் பேசினார். புதனன்று மாவட்ட ஆட்சி யர்கள், காவல்துறை தலை வர்கள், மருத்துவ அதிகாரிக ளுடன் முதல்வர் உரையாடி னார். அப்போது அவர், நோய் பரவலைத் தடுக்க நாம் கடும் முயற்சி நடத்துகிறோம். இந்த நேரத்தில் நோயை சா தாரணமாக கருதும் சிலரும் உள்ளனர். நோயை அதன் போக்கில் விட்டுவடலாம் என்கிற அணுகுமுறை ஒருபோ தும் கூடாது. நிலைமையை மோசமடையச் செய்பவர்க ளும் உள்ளனர். இதுபோன்ற வர்களுக்கு முன்பு ஒருவர் உதவியற்றவராக இருந்து விடக் கூடாது என்று முதல்வர் கூறினார். நோய் பரவலைத் தடுத்து உயிர்களை பாது காப்பது என்பதே நம்முன் உள்ள லட்சியம். நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரிப்பது எத னால் என்பது ஒவ்வொரு பகுதிகளின் தன்மையும் பரிசோதிக்கப்பட வேண்டும். அதன் பகுதியாக செய்ய வேண்டிய அனைத்தும் செய்ய வேண்டும்.
இப்போது மரண விகிதத்தை கட்டுக்குள் வைக்க நம்மால் முடிந்துள்ளது. ஆனால் நோய் அதிக அளவில் பரவி னால் மரண விகிதமும் அதி கரிக்கும். இதைத் தடுக்க சுகாதாரத்துறை அதிக கவ னம் செலுத்த வேண்டும். வார்டு அளவிலான குழுக்க ளை வலுவாக செயல்பட வைக்க வேண்டும். செயல் பாடு குறைவாக உள்ள வார்டு கள் குறித்து ஆய்வு செய்து செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். ஓணம் கொண்டாட்டம் வீடுகளில் மட்டுமாக மட்டுப் படுத்த வேண்டும். அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மலர் களை பயன்படுத்தி பூக்களம் அமைக்கும் நிலை இருக்க வேண்டும். வெளியில் இருந்து கொண்டுவரப்படும் பூக்கள் நோய் பரவலுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால்தான் இது. மாநில எல்லையில் தேவையான ஏற்பாடுகள் செய்த எச்சரிக் கையை பின்பற்ற வேண்டும்.
நல்ல முறையில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். மற்ற துறை ஊழியர்கள் கோவிட் தடுப்பு நடவடிக்கை களுக்கு முழுமையாக பயன் படுத்தப்படுகிறார்கள் என்பதை மாவட்ட ஆட்சி யர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். அமைச்சர்கள் கே.கே. சைலஜா டீச்சர், இ.சந்திர சேகரன், ஏ.சி.மொய்தீன், தலைமைச் செயலாளர் டாக்டர் விஸ்வாஸ் மேத்தா, மாநில காவல்துறை தலை வர் லோக்நாத் பெஹ்ரா, சம்பந்தப்பட்ட துறை செய லாளர்கள் உள்ளிட்டோர் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.