tamilnadu

img

கடும் வெயில்: 3 மணி நேரம் தொழிலாளர்களுக்கு ஓய்வு

கேரளாவில் கடும் வெயில் காரணமாக மதியம் 12 முதல் 3 மணிவரை தொழிலாளர்களுக்கு ஓய்வு வழங்க கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. 
கேரளாவில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி  வருகிறது. இதனால்  வெட்டவெளியில்                                                                                                                                                                                                                        பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில் 3 மணி நேரம் ஓய்வு கொடுக்க அம்மாநில அரசு அறிவுறுத்தி கேரள தொழிலாளர் துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வெட்டவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களது பணி நேரத்தை காலை 7 மணி முதல் இரவு 7 மணியாகவும், 8 மணி நேரம் பணி நேரமாகவும் கணக்கிடும் படியும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இடைவேளை விடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெட்ட வெளியில், சூரிய வெளிச்சத்தில் நேரடியாக பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த பணி நேரம் பொருந்தும். கடும் வெப்பத்தால் தொழிலாளர்களுக்கு எந்த உடல் நல பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, கோடை வெப்பத்தின் போது தொழிலாளர்களைக் பாதுகாக்கும் வகையில் கேரள அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டு  வருவது குறிப்பிடத்தக்கது.