கேரளத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டமான லைப் மிஷனின் கீழ் இரண்டு லட்சம் வீடுகள் கட்டி முடித்த மகிழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முதல்வரால் முகநூலில் பகிரப்பட்ட வீடியோவில் லைப் திட்டம் குறித்து பேசுகிறார்: ‘‘அவர்களிடம் சாதியைக் கேட்கவில்லை, மதத்தைக் கேட்கவில்லை, குடியுரிமையைக் கேட்கவில்லை. அவர்களை பார்த்தது உடன்பிறப்புகளாக! தலைசாய்க்க ஒரு இடம் இருக்கா என்று மட்டுமே கேட்கப்பட்டது. இல்லை என்று கூறியவர்கள் சேர்த்து அணைக்கப்பட்டனர். அவர்கள் படுத்துக்கொள்ள ஒரு இடம். ஒரு வீடு” இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார். அதில் பயனாளிகளின் மகிழ்ச்சியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.